districts

img

மலைவாழ் மக்களின் உரிமையை பறித்த கோவில் நிர்வாகம்

உடுமலை, டிச.17- பஞ்சலிங்க அருவிக்கு செல் லும் சுற்றுலா பயணிகளிடம், கட்ட ணம் வசூல் செய்யும் உரிமை மலை வாழ் மக்களிடம் இருந்ததை கோவில் நிர்வாகம் தனதாக்கிக் கொண்ட தற்கு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகு தியில் உள்ள திருமூர்த்தி மலை  அடிவாரத்தில் அமணலிங்கேஸ் வரர் கோவில் உள்ளது. கோவில் இருக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் மலைக்கு  மேல் பகுதியில் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் செயற்கை யாக அருவி உருவாக்கபட்டுள் ளது. பஞ்சலிங்க அருவிக்கு செல்ல முன்பு வனத்துறையின் மூலம் கட் டணம் வசூல் செய்யபட்டது. மலை வாழ் மக்கள் சங்கத்தின் போராட் டத்தினால் அருவிக்கு செல்ல கட்ட ணம் வசூல் செய்யும் உரிமை மலை வாழ் மக்களுக்கு தரப்பட்டு, பல  வருடங்கள் நடைமுறையில் இருந் தது. கடந்த இரண்டு ஆண்டுகள்  கொரோனா நோய் தடுப்பு கராண மாக சுற்றுலா பயணிகளுக்கு பஞ்ச லிங்க அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கபட்ட வந்த நிலையில், மீண் டும் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கபட்டது.  ஆனால், வசூல் செய்யும் உரிமையை மலைவாழ் மக்களுக்கு தராமல் கோவில் நிர்வாகமே அருவி பராம ரிப்பு கட்டணம் என்ற பெயரில் செய்து வருகிறது. பல தலைமுறைகள் இந்த மலையை நம்பி வாழ்ந்த மக்க ளுக்கு, 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக்க ளுக்கு அருகில் உள்ள கோவில்  வருமானத்தில் 10 சதவிகிதம் மக் கள் நலனுக்கு பயன்படுத்த வேண் டும். கோவில் மற்றும் மலை பாதை களை பராமரிக்க மலைவாழ் மக் களை பயன்படுத்த வேண்டும் என்ற உரிமை இருந்தும், கோவில் நிர்வா கம் படிப்படியாக அந்த உரிமைகளை  பறித்து வருவதை மாவட்ட நிர்வா கம் தலையிட்டு சரிசெய்ய வேண் டும். திருமூர்த்தி மலை கோவில் நிர் வாகத்திலும், அப்பகுதியில் இருக் கும் கடைகள், பூங்கா, நீச்சல் குளம், படகுத்துறை இவை அனைத்திலும் தனியார் அமைப்புகளுக்கு தரும்  வகையில் தான் கோவில் நிர்வாகத் தின் நடவடிக்கை உள்ளது. கோவி லையும், மலைப்பகுதியையும் பாதுகாக்கும் வகையில், தவறு செய்த கோவில் நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது.