districts

img

பாத்திரத் தொழிலாளர் சம்பள உயர்வு: அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கூட்டுகுழு ஆயத்தம்

திருப்பூர், மார்ச் 23 -   பாத்திரத் தொழிலாளர்கள் கூலி உயர்வு  தொடர்பாக தொழிலாளர்களுக்கு விளக்கி  அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோ சனை செய்வதற்காக அனைத்து தொழிற்சங் கங்களின் கூட்டுக்குழு கூட்டம் வியாழனன்று  நடைபெற்றது. பித்தளை, எவர் சில்வர் மற்றும் செம்பு  பாத்திர உற்பத்தியாளர்களுடன் தொழிற்சங் கங்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி யதில் 7 சதவிகிதம் மட்டும் தான் கூலி உயர்வு  வழங்க முடியும் என்று அறிவித்தனர். இதை  ஏற்க மறுத்து அனைத்து தொழிற்சங்கங் களின் கூட்டுக்குழு இதுவரை நடைபெற்ற  கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை கள் குறித்த விளக்க கூட்டத்திற்கு அழைப்பு  விடுத்திருந்தது. ஆத்துபாளையம் சாலை, காமாட்சியம் மன் தொழிற்சங்க கட்டடத்தில் வியாழனன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் பாத்திர தொழி லாளர்கள் பங்கேற்று அரங்கு நிரம்பி காட்சி யளித்தது. இந்த கூட்டத்திற்கு எல்பிஎப் செயலா ளர் வேலுச்சாமி தலைமை ஏற்றார். எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ராஜாமணி மற்றும் காமாட்சியம்மன் சங்கத் தலைவர் டி.இ. முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். ஐஎன்டியுசி நிர்வாகி ஈஸ்வரன், ஏஐடிசியு  நிர்வாகி செல்வராஜ், ஏடிபி நிர்வாகி தேவ ராஜ், பிஎம்எஸ் நிர்வாகி நாராயணன் ஆகி யோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டுகமிட்டி செயலாளரும், சிஐடியு நிர்வா கியுமான கே.ரங்கராஜ் பேசினார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 25, 27 ஆம் தேதி களில் நடைபெற உள்ளது. மார்ச் 28 ஆம் தேதி  தொழிலாளர்கள் உதவி ஆணையர் செந்தில் குமார் உற்பத்தியாளர்கள் தரப்பையும், தொழிற்சங்கங்கள் தரப்பையும் பேச்சுவார்த் தைக்கு அழைத்திருக்கிறார். இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்தகட்ட முடிவு குறித்து கூட்டுக்குழு அறிவிக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அப்போது தொழிலாளர்கள் கருத்துகள்  தெரிவிக்கையில், இப்பொழுது வழங்கப் படும் சம்பளம் போதுமானதாக இல்லை. கடந்த முறை 21.5 சதவிகிதம் கூலி உயர்வு  வழங்கப்பட்டது. இப்பொழுது அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது. எனவே போனமுறை வழங்கிய  கூலி உயர்வை விட இந்த முறை கூடுதலாக வழங்கினால் மட்டுமே போதுமானதாக இருக் கும். இந்த பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து எங்களுக்கு முறையாக வேலை  வழங்கப்படுவதில்லை. இந்த போக்கைக் கைவிட்டு, கூலி உயர்வை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சிஐடியூ பாத்திர சங்க  செயலாளர் குப்புசாமி, தலைவர் ஆறுமுகம்,  பொருளாளர் குபேந்திரன் உள்ளிட்ட நிர்வாகி களும்,  எல்பிஎப் சார்பில் ரத்தினசாமி, ஏஐடி சியூ சார்பில் நாகராஜ், ஐஎன்டிசியூ சார்பில்  அசோக்குமார், காமாட்சியம்மன் சங்கம் சார் பில் ஆறுமுகசாமி, எச்எம்எஸ் சார்பில் பாண் டியராஜன், ஏடிபி சார்பில் விஜயகுமார், பிஎம்எஸ் சார்பில் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.