தருமபுரி, ஜன.25- அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக் கிராம தார்ச்சாலை தற்போது ஜல்லி நிறைந்த மண்சாலையாக மாறியுள்ள நிலையில், உடனடியாக சேதமடைந்து காணப்படும் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத் திற்குட்பட்டது சிட்டிங் மலைப்பகுதி. சிட் லிங் முதல் கோட்டப்பட்டி வரையிலான தார்ச்சாலை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இச்சா லையை எஸ்.தாதம்பட்டி, சிட்லிங், கோட் டப்பட்டி, நரிப்பள்ளி, பயர்நாயக்கன் பட்டி உள்ளிட்ட 32க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ் வழியாக திருவண்ணாமலை, சேலம், அரூர், ஊத்தங்கரை, தீர்த்தமலை உள் ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், டிராக் டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சிட்லிங் சாலையானது இரு வழிச்சாலையாக இருப்பதால், அவ் வழித்தடத்தில் எதிரே லாரி பேருந்து கள் உள்ளிட்ட வாகனங்கள் வரும் போது ஒதுங்க முடியாமல் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தார்ச்சாலை ஜல்லிகள் நிறைந்த மண் சாலையாக மாறி பல வருடங்களாகி றது. இதனால் மழைக்காலங்களிலும், இரவு நேரத்திலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக் குள்ளாவது தொடர்ந்து வருகிறது. எனவே, மண்சாலையாக மாறியுள்ள கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையி லான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.