தருமபுரி, பிப்.4- நல்லம்பள்ளி அருகே உள்ள பூவல்மடுவு பகுதியில் பெட்ரோலியம் கிடங்கு அமைக் கும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவிற்கு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் எம்.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிப்ப டையும் விவசாயிகள் மற்றும் விளை நிலங்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பருவ மழை பொய்த்து போனதால், மாவட்டத்தை வறட்சி பாதிப்பு மாவட்டமாக மாவட்ட நிர்வா கம் அறிவிக்க வேண்டும். பென்னாகரம், பாலக்கோடு தாலுகாக்களில் தெற்கு வன உயிரின சரணாலயம் அமைக்கிற அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். நல் லம்பள்ளி வட்டம், டொக்குபோதனஅள்ளி கிராமம், பூவல்மடுவு பகுதியில் 100 ஆண்டு களுக்கு மேலாக குடியிருந்து வரும் விவ சாய நிலங்களில், ஒன்றிய அரசுக்கு சொந்த மான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திரவ எரிவாயு குழாய் மற்றும் அதன் கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் முற்சித்து வரு கிறது. அதனால் குடிமக்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுவதுடன், வனவிலங்குகள், மனிதர்கள், கால்நடைகள் வாழ தகுதியற்ற இடமாக மாறும். எனவே, அப்பகுதி விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, திரவ எரிவாயு குழாய் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். நூறு ஆண்டுகாலம் குடியிருந்து வரும் பூவல்மடுவு பகுதி மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, இக்கூட்டத்தில் விவசாயி கள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெரு மாள், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சு ணன், மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி, துணைச்செயலாளர்கள் ஆ.ஜீவானந்தம், கே.அன்பு, ஆர்.சக்திவேல், துணைத்தலை வர்கள் ஏ.நேரு, எஸ்.தீர்த்தகிரி, கே.என்.மல்லையன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.