அவிநாசி,டிச.13- அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாரதி பிறந்த நாளில் தனியார் திருமண மண்ட பத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர், தனது கவிதை கள் பாடல்கள் மூலமாக விடுதலை கருத்துக் களை பரப்பியவர். பல பன்முக தன்மை கொண்ட மகாகவி பாரதியின் 142 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், துளிர்கள் அமைப்பு, நல்லது நண்பர் அறக்கட் டளை, அன்பால் அரவணைப்பு அறக்கட்ட ளை, வேர்கள் அமைப்பு, அறிவுச்சுடர் அறக் கட்டளை, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, இணைந்த கைகள் உள்ளிட்ட பல சமூக அமைப்புகள் சார்பில் பேசும் பொற்சித் திரமே என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சா ளர் நந்தலாலா அவர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை நிர்வா கிகள் சம்பத், தினகரன், ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, நல்லது நண்பர் அறக்கட்டளை ரவிக்குமார், வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் சாய் கண்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியம், பாலகிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.