நாமக்கல், அக்.18- வாழ்வாதாரத்தை பறிக்கும் வனத்துறையை கண்டித்து அரியூர்நாடு, கிழக்கு வளவு மலைவாழ் மக்கள் புதனன்று மாசிலா அருவி உள்ள பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளன. இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு வனத் துறை சார்பாக மாசிலா அருவியை விரி வாக்க பணிகளுக்காக கால வரையின்றி பூட்டுவதாக அறிவித்துள்ளனர். இதனால், மாசிலா அருவியைச் சுற்றி யுள்ள அரியூர்நாடு, கிழக்கு வளவு நாடு மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் இவர்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வனத்துறையினர் திடீ ரென விவசாய நிலங்களுக்கு செல்லும் மக்களை தடுத்து நிறுத்தி மிரட்டி வருவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத் துறை அலுவலர் ஆகியோரிடம் மலைவாழ் மக்கள் புகார் அளித்தனர். ஆனால், இது வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. அரியூர் நாடு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், தொடர்ந்து வனத்துறையினர் மாசிலா அருவிக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய விடாமலும், கடைகள் அமைக்க விடாமலும் விரட்டி வருவதாக மலைவாழ் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்நிலையில், மாசிலா அருவி அருகே 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட் டத்தில் ஈடுபட்டவர்களை அரசுத்துறை அதி காரிகள் சமரசம் செய்தனர்.