districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டம் வெற்றி

அவிநாசி அக்.19- அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வியாழ னன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் காத்திருக்கும் போராட்டம் அறிவித்து திரண்டபோது, போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பட்டா வழங்க உறுதியளித்தார்.  அவிநாசி ஒன்றியம், தண்டுக்காரபாளை யம் அருகே குமாரபாளையம் ஆதிதிராவி டர் காலனி உள்ளது. 20 ஆண்டுகளாக குடி யிருந்து வரும் பட்டியலின மக்களுக்கு வீட்டு  மனை பட்டா கோரி 57 நபர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மை அதிதிராவிடர் நத்தம் பிற்ப டுத்தப்பட்டோர் நத்த நிலங்களில் வழங்கப் படும் வீட்டுமனைகள் ஒப்படைப்புக்கான இணைய வழிபட்டா 40 நபர்களுக்கு மட்டும்  கடந்த 18.1.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 17 பேருக்கு பலமுறை ஆட்சி யர், வட்டாட்சியர் உள்ளிட்டவர்களிடம் மனு  அளித்தும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, வியாழனன்று காலை வட் டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் காலவரையற்ற காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட போவதாக துணை வட்டாட்சியரி டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு  அளித்திருந்தனர்.  இதன்தொடர்ச்சியாக வியாழனன்று, பட்டா கேட்டு 17 குடும்பத்தினருடன் தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  மாவட்டச் செயலாளர் கனகராஜ் தலைமையில், வட் டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும்  போராட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் நந்த கோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பழ னிசாமி, முருகேஷ், அங்கு லட்சுமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர்  சண்முகம், சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ராஜன்,  ஆதித்தமிழர் பேரவை, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் விடுதலைச் செல்வன், ஒன்றிய செயலாளர் மணி, ஆதித்தமிழர் ஜன நாயக கட்சி மாவட்ட நிர்வாகி அ.சு.பௌத் தன், திராவிட தமிழர் கட்சி மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலை மையில், தொடர் காத்திருப்புப் போராட்டத் த்தில், மக்களோடு பல்வேறு அமைப்பினர் திரண்டதை கண்ட அவிநாசி காவல்துறையி னர் பேச்சுவார்த்தைக்கு வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர். இதையடுத்து வட் டாட்சியர் மோகனன், ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர், ஆகியோர்  பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நகல் காண்பித்து வியாழனன்று மாலை 17 குடும் பத்தினருக்கும் மேனுவல்  பட்டா வழங்குவ தாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.