districts

img

கிடப்பில் போடப்பட்டுள்ள சனத்குமார் நதி சீரமைப்புத்திட்டம்

தருமபுரி, டிச. 25- கிடப்பில் போடப்பட்டுள்ள சனத்குமார் நதி கால்வாய்களின் சீர மைப்பு திட்டப் பணியை விரைந்து  தொடங்க வேண்டும் என விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், வத்தடல் மலை அடிவாரத்தில் இருந்து உரு வாகும் சனத்குமார் நதி, தருமபுரி   நகரத்தின் வழியாக பாய்ந்து கம்பை நல்லுார் அருகே உள்ள தென் பெண் ணையாற்றில் கலக்கிறது. வத்தல் மலை அடிவாரத்தில் உள்ள தடுப்ப ணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், அன்னசாகரம் ஏரி உள் ளிட்ட பல்வேறு ஏரிகளின் உபரி நீர்,  சனத்குமார் நதி வழியாக செல்வது  வழக்கம். இந்த நதி செல்லும் 40  கிலோ மீட்டர் பகுதியில் உள்ள கால் வாய் மூலம் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை  பாசன வசதி பெற்று வந்தன. இந்நி லையில் கடந்த சில ஆண்டுகளாக  சனத்குமார் நதியில் ஆக்கிரமிப்பு கள் அதிகரித்து வருகிறது.  மேலும், நதி கால்வாயில் தண் ணீர் ஓடும் பரப்பின் பெரும் பகுதி  செடி, கொடிகள் மற்றும் புதர்களின்  ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது.  இந்த நதியில் பல்வேறு இடங் களில் இருந்து கழிவுநீர் கலந்து வரு வதால் சனத்குமார் நதி, கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறி உள் ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நதி யில் சாயப்பட்டறைகளின் இரசா யன கழிவுநீரும் கலப்பதால், விவ சாயப் பயிர்கள் நோய்தாக்கு தலுக்கு உள்ளாகின்றன. எனவே, சனத்குமார் நதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என, விவசாயிகள் பல  ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதைய டுத்து, கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன் 50 கோடி ரூபாய் மதிப்பீட் டில் சனத்குமார் நதி கால்வாயை  சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப் படும் என, அறிவிக்கப்பட்டது. இத னைத்தொடர்ந்து, கடந்த 2022  நவம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு  சட்டபேரவை மனுக்கள் குழு தலை வர் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன்தலைமையிலான குழுவி னர், சனத்குமார் நதியை தூர்வாரு வது குறித்து ஆய்வு மேற்கொண்ட னர். ஆய்வு பணி மேற்கொண்டு ஓராண்டு காலமாகியும், நதியை  தூய்மை செய்ய, மாவட்ட நிர்வாக மும், துறை அலுவலர்களும்  முனைப்பு காட்டவில்லை. காலதாமதம் ஏற்படுவதால் சனத்குமார் நதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது டன், அதிகளவில் கழிவுநீர் கலந்து,  தென்பெண்ணை ஆற்றில் கலக் கும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே  சனத்குமார் நதியை சீர மைக்கும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்பதே விவசாயிகள் மற் றும் பொதுமக்களின் எதிர்ப் பார்ப்பாக உள்ளது.