districts

img

நமக்கான இந்தியாவை நோக்கி தொடர் வகுப்பு திருப்பூரில் உற்சாகமாக தொடங்கியது

திருப்பூர், செப். 21 - நமக்கான இந்தியாவை நோக்கி என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தும் 10 நாள் காலை நேரத் தொடர் வகுப்பு திருப்பூரில் உற் சாகமாகத் தொடங்கியது. திருப்பூர் தியாகி பழனிசாமி நிலை யத்தில் வியாழனன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கிய முதல் நாள் அமர் வுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாந கரக்குழு உறுப்பினர் பா.ஞானசேகரன் தலைமை வகித்தார். இதில் மதச்சார் பின்மையைத் தகர்க்கும் போலி தேசிய வாதம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட் சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு கருத்துரை ஆற்றினார். அவர் பேசுகையில், தமிழ்த்தேசி யம், திராவிட தேசியம், இந்துத்துவ தேசி யம் என பலவித தேசியங்களை முன் வைத்து பல இயக்கங்கள் பேசி வரு கின்றன. இந்தியாவை பொறுத்தவரை நமது தேசியம் என்பது அரசியல் சட்டத் தில் மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயக  குடியரசு என வரையறுக்கப்பட்டுள் ளது. இன்று பாரதிய ஜனதா கட்சி முன் வைக்கும் தேசியம் என்பது மதவாத அடிப்படையில் செயல்பட்டு, அரசியல் சட்டத்தை தகர்க்கக்கூடியதாக இருக் கிறது. மதச்சார்பின்மை என்பதும், மதநல் லிணக்கம் என்பதும் வெவ்வேறானதா கும். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள்  ஒற்றுமையாக இருப்பது என்பது மதநல் லிணக்கம். ஆனால் மதச்சார்பின்மை என்பது அரசு நிர்வாகம்,

அரசியல் துறை  எந்தவொரு மதத்தையும் சாராமல் செயல்பட வேண்டும் என்பதாகும். அனைத்துவித மத நம்பிக்கைகள், எந்த வொரு மத நம்பிக்கையும் இல்லாத வர்கள் என அனைத்து குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு மதச்சார் பின்மை அவசியம். பெரும்பான்மை மத அடிப்படையி லான தேசியம் என்பதை முன்னெடுப் பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மத அடிப்படையில் தேசியம் என வரை யறுத்த, ஒரே முஸ்லிம் மதத்தைப் பின் பற்றக்கூடிய பாகிஸ்தானில், வங்க தேசம் நீடிக்க முடியவில்லை. தனி நாடாக மாறியது. அதேபோல் ஒரே மொழி அடிப்படையில் தேசியம் என் றால், ஆந்திரா, தெலுங்கானா என  இரண்டு மாநிலங்களாகப் பிரிந்தன. எனவே தேசியம் என்பதை நடைமுறை யில் வரையறுப்பது சிக்கலானது. மார்க்சிய அடிப்படையில், பார்க்கும் போதுதான் தேசியம் என்பதன் பொரு ளாதார அடிப்படை உறவுகளைப் புரிந்து கொள்ள முடியும். இன்று பாஜக ஆர்எஸ்எஸ் முன் வைக்கும் ஒற்றைத் தேசியம் என்பது  இந்தியாவின் மொழி, இன, பண்பாட்டு  வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாமல்  அழிக்கப் பார்க்கிறது. பெரும்பான்மை  உழைக்கும் மக்களை ஜனநாயகரீதி யாக ஒன்றுபடுத்தக்கூடிய, அவர்களின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய, உரிமை வழங்கக்கூடிய இந்தியாவின் மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசு என்ற தேசியத்தைப் பாது காக்க வேண்டும். இவ்வாறு எஸ்.ஜி. ரமேஷ்பாபு கூறினார். இந்த வகுப்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருந் திரளானோர் கலந்து கொண்டனர்.