districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிபிஎம் பொதுக்கூட்டம்

கோவை, மார்ச் 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கோவை மாவட்டம், வெள்ளலூரில் நடைபெற்றது. வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே  நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, சிபிஎம் மதுக்கரை ஒன் றியக்குழு உறுப்பினர் ஆர்.குருநாதன் தலைமை ஏற் றார். இதில், வெள்ளலூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெள்ளலூர் சிங்காநல்லூர் செல்லும் நொய்யல் ஆற்றுப் பாலம் அமைத்துக் கொடுத்த தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சண்முகசுந்தரம் எம்பி., மற்றும் பி.ஆர்.நடராஜன் எம்பி., ஆகியோருக்கு இக்கூட் டத்தில் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட் டது. முன்னதாக, இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம், தமிழ்நாடு விவசாய சங்க  மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா உள்ளிட்டோர் உரை யாற்றினர்.

கேட்பாரற்று கீழே கிடந்த செல்போன், பணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்

தருமபுரி, மார்ச் 9- பென்னாகரத்தில் கீழே கிடந்த கைப்பேசி, பணம் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் திருமலை, தனுஷ். இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, காந்திநகர் பகுதி சாலையில் ஒரு கைப்பேசி மற்றும் பணம் ஆகியவை கிடந்தன. இதனைக்கண்ட மாணவர்கள் அவற்றினை எடுத்துக்கொண்டு, பென்னாகரம் காவல் நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வனிடம் வழங்கி உள்ளனர். அதனை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், இரு மாணவர்களையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார். பின்னர் இப்பொருட்களுக்கு உரியவரான காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் விக்னேஷிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் கருணாநிதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், காவலர்கள் உடனிருந்தனர். கீழே தவறவிட்ட பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரு அரசு பள்ளி மாணவர்களையும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

அரசு கல்லூரியில் பட்டமேற்பு விழா

கோவை, மார்ச் 9- பொள்ளாச்சியில், உள்ள அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் பட்டமேற்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இக் கல்லூரியில் பட்டமேற்பு விழா கல்லூரி வளாக கூட்ட ரங்கில் நடைபெற்றது. ஆங்கிலத்துறை, கணிதவியல் துறை உள்ளிட்ட துறை சார்ந்த 220 மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தால் பட்டம் அளிக்கப் பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் உ.சுமதி தலைமை வகித்தார். எம்ஜிஎம் கல்லூரியின் முதல் வர் ரா.முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டார். இதில், முன்னாள் ஆட்சியர் பாலகிருஷ் ணன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

கோவை, மார்ச் 9- ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களின் பயிர்களை  காக்க தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார். ஆழியாறு அணை மூலமாக புதிய மற் றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங் கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள பள்ளி விளங்கால், பெரியணை, காரப்பட்டி, அரியா புரம், வடக்கலூர் அம்மன் ஆகிய ஐந்து கால் வாய்கள் மூலம் 6,400 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. கடும் வறட்சி காரணமாக பயிர் கள் காய்ந்து வருகிற நிலையில், பாசனத் துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இத னையேற்று, கோவை மாவட்டம், ஆனை மலை வட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட் டத்தில், மார்ச் 11 முதல் ஏப்ரல் 15 வரை 350  மில்லியன் கன அடிக்கு மிகாமல்  தண்ணீர்  திறந்து விட நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

வட்டார போக்குவரத்து அலுவலகத்தை வாடகைக் கார், ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகை

உதகை, மார்ச் 9- உதகையில் வட்டார போக்குவரத்து அலு வலகத்தை வாடகைக் கார் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பிரதான  தொழிலாக உள்ளது. இதேபோல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஆயிரக் கணக்கான வாடகைக் கார்கள் மற்றும் ஆட் டோக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலை யில், ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ள எல்லையை விரிவுபடுத்த வேண்டும்  என ஆட்டோ ஓட்டுநர் வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில், பிங்கர்போஸ்ட் மற்றும்  மத்திய பேருந்து நிலையம் பகுதியில் வாடகைக் கார் நிறுத்த இடம் ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று கார் ஓட்டுநர் கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், தங்களது கோரிக் கைகளை வலியுறுத்தி மனுவை உதகை  வட்டார போக்குவரத்து அலுவலர் தியாக ராஜனிடம் வழங்கினர். இதனிடையே, சுற்று லாக் கார் ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்ததை அறிந்த ஆட்டோ  ஓட்டுநர்கள் வட்டாரப் போக்கு அலுவல கத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருதரப்பி னரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.

தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை

கோவை, மார்ச் 9-  கோவையில் தொழிலதிபர் வீட்டில் அம லாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற் கொண்டனர். கோவை மாநகராட்சி, ராமநாதபுரம் பகுதி யில் கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்தவர் அனீஷ் பிரசன்னா(25), கோவையில் கார்  ஷோ ரூம் நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு சனியன்று காலை திடீரென 4 கார்களில் 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதி காரிகள் வந்து, வீட்டில் திடீர் சோதனை யில் ஈடுபட்டனர்.  அப்போது அமலாக்கத் துறையினர் வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி, வீட்டில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல, அம லாக்கத்துறையினர் சென்னையில் லாட்டரி  அதிபர் மார்ட்டினின் குடும்பத்தினருக்கு சொந் தமான இடங்களில் சனியன்று சோதனை நடத்தினர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சோதனைகளுக்கும், அனீஷ் பிர சன்னாவிற்கும் தொழில் அடிப்படையிலான தொடர்பு இருப்பதாகவும், அதன் அடிப்படை யிலேயே கோவையில் உள்ள அவரது வீட் டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத் தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை யில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அமலாக் கத்துறையினரின் சோதனையை முன்னிட்டு  அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையி னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒன்றிய மோடி அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றச் சாட்டு முன்வைத்து வருகிற நிலையில், அண் மையில், மார்ட்டின் குடும்ப உறுப்பினர் விடு தலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த கார ணத்தால் இந்த சோதனை நடைபெற்று இருக் கலாம் என்றும், தேர்தல் வசூலுக்காக பாஜக ஏவி விட்டிருக்கலாம் எனவும் அரசியல் விமர் சகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்ற னர்.

மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் சிக்கல்: குறைகளைத் தீர்க்க சிபிஎம் வேண்டுகோள்

திருப்பூர், மார்ச் 9- வேலம்பாளையம் பகுதியில் வசிக் கும் சில பெண்களுக்கு தமிழ்நாடு அர சின் மகளிர் உரிமை தொகை பெறுவதில்  சிக்கல் உள்ளது. எனவே உரிய பயனாளி களுக்கு உரிமைத்தொகை சேரும் வகை யில் குறைகளைத் தீர்க்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரக்குழு சார்பில் வலியுறுத் தப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு செயலா ளர் ச.நந்தகோபால் சனியன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, தமிழ்நாடு அரசு அண்மையில் மக ளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறி முகப்படுத்தி, மாதம் தோறும் பெண்க ளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக் கில் செலுத்தி வருகிறது. இந்நிலையில்,  வேலம்பாளையம் பகுதியில் ஏற்க னவே மகளிர் உரிமைத் தொகை பெற்று  வந்த பெண்கள் தாங்கள் கொடுத்த  வங்கிக் கணக்கிற்கு மாறாக, பயன்பாட் டில் இல்லாத வங்கிக் கணக்கிற்கு தொகை அனுப்பப்படுவதாகவும், அந்த வங்கிகள் வந்த உரிமைத் தொகை  முழுவதையும் எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கனரா  வங்கியில் கணக்கு உள்ள ஒரு பெண்  பயனாளிக்கு இரண்டு மாதங்களாக மக ளிர் உரிமைத் தொகை வந்து கொண்டி ருந்தது. கடந்த மாதம் உரிமை தொகை  வரவில்லை. இசேவை மையத்தை அணுகிக் கேட்டபோது, தொகை நிறுத் தப்படவில்லை என்று தெரிவித்துள்ள னர். மேலும், தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கினால் அந்தக் கணக் கிற்கு பணம் போட்டு விடுகிறார்கள் என்று அருகில் உள்ளவர்கள் சொன்ன தைக் கேட்டு, காந்தி நகர் தபால் அலுவல கத்தில் கணக்கு தொடங்கி இருக்கிறார்.  இதற்குள் 3 மாதம் கடந்த நிலையில் அவ ரது அலைபேசி எண்ணுக்கு டிஎன்எஸ்  வங்கி சம்பந்தமாக ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அக்குறுஞ்செய்தியைக் கொண்டு, வங்கியைத் தேடிச்சென்று, கேட்ட போது, தனலட்சுமி வங்கியோடு இணைக்கப்பட்ட டிஎன்எஸ் வங்கி கணக்கிற்கு கடந்த மூன்று மாத கால மாக மகளிர் உரிமைத்தொகை அனுப் பப்பட்டிருக்கிறது. செயல்பாட்டில் இல் லாத, தான் கொடுக்காத வங்கிக் கணக் கிற்கு உரிமை தொகை மூன்றாயிரம் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் இருப்புத் தொகை இல்லை, இன்னும் 3, ஆயிரத்து 500  ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டியுள் ளது. எனவே, கணக்கில் உள்ள தொகை யைத் திரும்பத் தர முடியாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளனர். எனவே வேறு வங்கிக் கணக்கில் வரவு  வைக்கப்பட்ட உரிமைத் தொகையை மீண்டும் உரிய பயனாளிகளுக்கு சேரும்  வகையில் திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு  உரிமைத் தொகைத் திட்டத்தில் உள்ள  குறைகளைக் களைந்திட நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள் ளது.

காதர்பேட்டை சந்தையில் உற்பத்தி நிறுவனங்களின் பதாகைக்கு எதிர்ப்பு: இடைத்தரகர்கள் போராட்டம்

திருப்பூர், மார்ச் 9 – திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தை பகுதியில் பனி யன் உற்பத்தி நிறுவனங்களின் தொடர்பு எண்ணுடன் விளம்பர  பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் நேரடியாக உற்பத்தி நிறுவனங்களை அணுகினால், தங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி இடைத்தர கர்கள் சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகே காதர் பேட்டை பகுதியில்  பனியன் சந்தை இயங்கி வருகிறது. இங்கு வெளியூர்கள் மற் றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்கள் வந்து  மொத்த விலைக்கு பனியன் ஆடைகளைக் கொள்முதல் செய்து கொண்டு செல்வது வழக்கம். இங்கு நூற்றுக்கும்  மேற்பட்ட ஏஜென்டுகள், இடைத்தரகர்கள், வெளியூரிலி ருந்து பனியன் ஆடைகள் வாங்க வரும் வர்த்தகர்களுக்கு உற் பத்தி நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி விற்பனை  செய்கின்றனர். இதன் மூலம் இவர்களுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கிறது. இந்நிலையில் நேரடியாக  உற்பத்தி நிறுவனங்களின் பெயர் விபரம் மற்றும் தொடர்பு  எண்களுடன் காதர்பேட்டை சந்தை பகுதியிலேயே விளம்பர  பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில்  இருந்து வரக்கூடிய வர்த்தகர்கள் முகவர்கள், இடைத்தரகர்க ளைத் தவிர்த்து விட்டு நேரடியாக உற்பத்தி நிறுவனங்களை  அணுகி கொள்முதல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இடைத் தரகர்கள் காதர்பேட்டை பகுதியில் திரண்டு சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவலர்கள் பேனர் அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழக முதல்வர் பொள்ளாச்சி வருகை

தமிழக முதல்வர் பொள்ளாச்சி வருகை கோவை, மார்ச் 9- தமிழ்நாடு முதலமைச்சர் பொள்ளாச்சிக்கு வருவதை யொட்டி, நிகழ்விடத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி இரண்டாம் கட்டமாக ஆய்வு மேற்கொண்டார்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு வருகின்ற 13 ஆம்  தேதியன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகிறார். இத னையொட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பொதுக்கூட்டம் நடக்கும் இடத் தில் இரண்டாம் கட்டமாக ஆய்வு நடத்தினார். 15 ஏக்கர் பரப்ப ளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தும் பணி துவங்கி யது. குறிப்பாக முதலமைச்சர் வரும் பாதை தார்ச்சாலை அமைப்பது. பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம்  போன்றவற்றை அதிகாரிகளுடன் அமைச்சர் 3 மணி  நேரமாக ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொ டர்ந்து நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக்கிட உரிய ஆலோச னைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

தொழில் நஷ்டத்தால் தற்கொலை 

தொழில் நஷ்டத்தால் தற்கொலை  கோவை,மார்ச் 9- தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆசிட் குடித்து  தொழில்முனைவோர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, மணியகாரன் பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (43). இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வந்தார். அவர்  தனது நிறுவனத்தினை மேம்படுத்துவதற்காக கடன் பெற்றிந் தார். ஆனால், தொழிலில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. மாறாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.  இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் கவனிக் காத போது, தனது வீட்டின் கழிவறையில் பாட்டிலில் இருந்த  ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  தொழில் நஷ்டம் காரணமாக தொழில் முனைவோர் ஆசிட்  குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்ப குதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சரவ ணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

900 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு

900 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு சேலம், மார்ச் 9- மேச்சேரி அருகே 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்  எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட் டது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகே  மாதநாயக்கன்பட்டியில் காமராசர் நினைவு அரசு மேல்நி லைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு  மன்றத்தின் மாணவர்கள் இப்பள்ளியில் இருந்து 2 கி.மீ.  தொலைவில் உள்ள பாணாபுரத்தில் கல்வெட்டு இருப்ப தாக ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. தொன்மை பாதுகாப்பு  மன்றத் தலைவரும், தலைமை ஆசிரியருமான சந்திரசேக ரன், மன்றத்தின் பொறுப்பு ஆசிரியர்கள் அன்பரசி, விஜயகு மார் ஆகியோரை கள ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். ஆசிரி யர்களும், மாணவர்களும் பாணாபுரத்துக்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு விவசாய நிலத்தில் ஆசிரியர் அன்ப ரசி கல்வெட்டை எடுத்து ஆய்வு செய்தார். அதில், அந்தக்  கல்வெட்டு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு  என தெரியவந்தது. பூமிக்கு மேல் நின்ற நிலையில் உள்ள  செந்நிறக்கல் ஆகும். சுமார் 3 அடி உயரமும், 2.5 அடி அகல மும், 12 வரிகளையும் கொண்ட இதன் காலம் பொது ஆண்டு 12  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஸ்ரீகிருஷ்ணாபுரத்து இறைவ னுக்கு வாணாபுரம் (பாணாபுரம்) தேவதானமாக கொடுத்த  செய்தி இக்கல்வெட்டில் உள்ளது. கொடுத்தவர் அரசனாக  இருக்கலாம். நாடும் வண்ண உடையும் கொடுத்திருக்க லாம் என்ற செய்தி உள்ளது. கல்வெட்டில் வாணாபுரம் என  உள்ளது. தற்போது மருவி பாணாபுரம் என்று அழைக்கப்ப டுகிறது. இது 900 ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துகள் என்பதை கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ராஜகோபால் உறுதி செய்துள்ளார்.

மக்கள் நீதிமன்றம் மூலம், 683 வழக்குகள் முடித்து வைப்பு

சேலம், மார்ச் 9- ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இலவச வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் 683  வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.6 கோடி 57 லட்சத்து 32 ஆயிரத்து 775க்கு தீர்வு  காணப்பட்டன. சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக மாக தேங்குவதை தவிர்க்கவும், நிலுவை யில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும்  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார் பில், தேசிய மற்றும் மாநில அளவிலான மக் கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி தேசிய அளவி லான மக்கள் நீதிமன்றம் ஆத்தூர் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந் தன் தலைமையில் நடைபெற்றது. இந்த மக் கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  சிவில், காசோலை மோசடி, மோட்டார் வாகன  விபத்து, நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப நல  வழக்குகளுக்கான சமரச முறையில் தீர்வு காணும் வகையில் இரண்டு அமர்க ளாக நடைபெற்றது. இந்த வாய்ப்பை பயன்ப டுத்தி நீதிமன்றத்தில் ஆஜராகிய பொது மக்கள், 683 வழக்குகளுக்கு சமரசம் செய்யப் பட்டு ரூ.6 கோடி 57 லட்சத்து 32 ஆயிரத்து 775  ரூபாய் தீர்வு காணப்பட்டது. இதில் 5 ஆண்டுக ளுக்கு மேல் நிலுவையில் இருந்த 22 வழக்கு கள் முடித்து வைக்கப்பட்டன. மேலும், விளம் புகை பரிகாரத்தில் ரூ.85 லட்சம் தீர்வும்,  அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு நடை பெற்ற விபத்து வழக்கில் வெண்ணிலா என்ப வருக்கு ரூ.14.20 லட்சம் காசோலையும் வழங் கப்பட்டது. ஆத்தூர் பகுதியில் நிலம் வழக்கு  சம்பந்தமாக சமரசம் செய்யப்பட்டதில் ரூ.7.5 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது.