தருமபுரி, நவ.24- தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்று வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் காத்தி ருப்புப் போராட்டம் வெற்றி அடைந் துள்ளது. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்க ளுக்கு நீதிமன்ற உத்தரவின்படி ஊதி யம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் ஆகியவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, சிஐடியு ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத் தின் தலைமையில், ஒப்பந்த தூய் மைப் பணியாளர்கள் தருமபுரி நக ராட்சி அலுவலகம் முன்பு காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 ஆவது நாளாக வெள்ளி யன்றும் போராட்டம் தொடர்ந்த நிலை யில், சிஐடியு தலைவர்களை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத் தது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், நிர்வாகத்தின் சார் பாக நகராட்சி ஆணையர் புவனேஸ் வரன், தூய்மை அலுவலர் உட்பட அரசு அதிகாரிகளும், சிஐடியு மாநி லச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.செல்வம், மாவட்ட துணைத்தலைவர் சி.குட்டி யப்பன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, தமிழ்நாடு அரசாங் கத்தின் குறைந்தபட்ச ஊதிய சட்டத் தின்படி, தொழிலாளர் நல துறையால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2டி, எண்:62ன் படி நாளொன்றுக்கு தினக் கூலியாக ரூபாய் 610 வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை டிசம்பர் மாத இறுதிக்குள் நகராட்சி இயக்கு நரிடம் கருத்துரு பெற்று, ஊதியம் வழங்க நடவடிக்கையும் மேற்கொள் ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனடிப்படையிலும், தொழிலாளர் இணை ஆணையர் அறிவுறுத்தலின் அடிப்படையில் 4 நாட்களாக நடை பெற்ற காத்திருப்புப் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் நகராட்சி நிர்வாகத் தின் தொழிலாளர்கள்தான் என்றும், போராட்டத்தில் பங்கேற்ற தொழிலா ளர்களை நேரடியாகவோ, மறைமுக மாகவோ எவ்வித பழிவாங்குதல் நட வடிக்கையிலும் நகராட்சி நிர்வாகம் ஈடுபடக்கூடாது. தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கக் கூடாது உள்ளிட்ட தொழிலாளர் உதவி ஆணை யரின் அறிவுறுத்தல்களை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.