சேலம், நவ.16- சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் புதிய படைப் புகளை புத்தகத் திருவிழாவில் வெளி யிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார். சேலம் புத்தகத் திருவிழா முன்னேற் பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மே கம் தலைமையில் புதன்கிழமை நடை பெற்றது. இதில் ஆட்சியர் செ.காா்மே கம் கூறியதாவது: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழா வருகின்ற நவ. 21 முதல் டிச. 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துத் தரப்பினரும் பயன்பெ றும் வகையில் 250-க்கும் மேற்பட்ட புத் தக விற்பனை அரங்குகளுடன் அறிவு சார்ந்த பல்வேறு காட்சி அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் புதிய படைப் புகளை இந்த புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. எனவே, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் வெளியிடத் தயாராக உள்ள தங்களது படைப் புகளை உடனடியாக சேலம் மாவட்ட மைய நூலகத்தில் வழங்கி விவரங் களை தெரிவிக்கலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஒவ் வொரு படைப்பாளரும் தமது நூல்க ளில் 25 பிரதிகளை உடனடியாக சேலம் மாவட்ட மைய நூலகத்தில் ஒப்ப டைத்து, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். விழாவின் நிறை வில் விற்பனையான நூல்கள் போக மீத நூல்களை மீண்டும் முறையாக நூலக அலுவலர் மூலமாக திரும் பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரி வித்துள்ளார். இக்கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவ லர் பெ.மேனகா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.