பொள்ளாச்சி, ஜூன் 26- பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட் பட்ட ஊராட்சி ஒன்றிய அரசு நடு நிலைப்பள்ளியின் கட்டிடம் சிதில மடைந்து காணப்படுகிறது. மாண வர்களின் நலன் கருதி சேதம டைந்த இப்பள்ளியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட செம்பா கவுண்டர் காலனியில் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுண்ணாம்பு கால்வாய், சூளேஸ்வரன்பட்டி, மோதிராபுரம், சிடிசி காலனி உள்ளிட்ட பகுதிகளி லிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலை யில், இப்பள்ளியின் கட்டிடம் சிதில மடைந்து மேற்கூரை இடிந்து காணப் படுகிறது. கடந்த சில வருடங்க ளாக இப்பள்ளியில் எவ்வித பரா மரிப்பு பணிகளும் நடைபெற வில்லை. தற்போது பருவமழை தொடங்க உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி யுள்ள பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகி றது. தற்போது கோடை விடுமுறை முடிந்து நடப்பு கல்வியாண்டு துவங் கியுள்ளது. மாணவர்களும் அதிக ளவு பள்ளிக்கு வர துவங்கியுள்ள னர். இந்நிலையில், பள்ளி கட்டிடங் கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் சேத மடைந்துள்ளதால், தொடர் மழைக் காலங்களில் இடிந்து விழும் அபா யம் உள்ளது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இப்பள்ளி குறித்து கவனம் செலுத்தி உடனடியாக சீர மைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடிப்படை வசதிகள் வேண்டும் இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், சூளேஸ்வரன் பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடு நிலைப் பள்ளி சிதிலமடைந்து காணப் படுவதால், எந்நேரமும் இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை, குடி நீர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ள னர்.