districts

img

வதந்தி விவகாரம்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் திருப்பூர் எம்.பி.,கே.சுப்பராயன் பேட்டி

திருப்பூர், மார்ச் 6 - வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக போலியான வீடியோக் களைப் பரப்பியது தொடர்பாக நாடா ளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி  எழுப்பப்படும் என்று திருப்பூர் எம்.பி.  கே.சுப்பராயன் கூறினார்.  திருப்பூரில் உள்ள இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள் கிழமை மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னி லையில் அவர் செய்தியாளர்க ளுக்குப் பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: தமிழகத்தில் வட  மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக் குதல் நடத்தியது போல் சித்திரித்த சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பப் பட்டது. திருப்பூரில் கடந்த ஞாயிற் றுக்கிழமை ஆய்வு நடத்திய பீகார்  மாநில அதிகாரிகள் குழு நேரிடை யாக பல பகுதிகளில் தொழிலாளர் களை சந்தித்துள்ளது, எந்தவித மான பதற்றமும் இல்லை என்றும்,  மாநில அரசின் நடவடிக்கைகள்  திருப்திகரமாக உள்ளதாகதெரி வித்து உள்ளனர். ஆர்எஸ்எஸ் சங்பரி வார் அமைப்புகள் வரும் மக்கள வைத் தேர்தலில் பீகார், உத்தரபிரதே சம், ஜார்கண்ட் மாநிலங்களில் அரசி யல் அறுவடை செய்வதற்காக இந்த  வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்த வீடியோக்கள் அரசியல் உள் நோக்கத்துக்காக திட்டமிட்டு உரு வாக்கப்பட்ட வதந்திதான். வடமா நிலங்களில் ஹோலிப் பண்டிகை யைக் கொண்டாடுவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். இந்த வீடியோக்களை வெளியிட்ட வர்கள் தப்ப முடியாதவாறு வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.  நாடாளுமன்றத்தில் வரும் மார்ச்  13 ஆம் தேதி தொடங்கும் கூட்டத்  தொடரில் வடமாநிலத் தொழிலா ளர்கள் விவகாரத்தில் போலி வீடி யோக்கள் பரப்பியது தொடர்பாக தமி ழக எம்.பி.க்கள் சார்பில் கேள்வி எழுப்பப்படும் என்றார்.  இந்த சந்திப்பின்போது, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், சிபிஐ துணை மேயர்  ஆர்.பாலசுப்பிரமணியம், காங்கிரஸ்  மாநகர் மாவட்டத் தலைவர் ஆர். கிருச்ஷ்ணன், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். நாகராஜ் உள்பட கூட்டணி கட்சி நிர் வாகிகள் பங்கேற்றனர்.