districts

img

சாலைப்பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு போராட்டம்

திருப்பூர், மார்ச் 10- தொடர் போராட்டங்களால் பெற்ற பணி நியமனத்தை, நாங்கள் ஆட்சிக்கு வந்துதான் வழங்கினோம் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் கூறியதை கண்டித்தும், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் பட்டை நாமம் போட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர், தாராபுரம், கரூர்,  ஈரோடு ஆகிய கோட்டத் தலைவர் கள் எஸ்.அண்ணாதுரை, கே.வெங்கி டசாமி, கே.செவந்திலிங்கம், எஸ். ராஜேந்திரன் தலைமையில் போராட் டம் நடைபெற்றது. இதில், சாலைப்ப ணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண்டும்.  பணி நீக்க காலம் மற்றும் பணிக்கா லத்திலும் உயிர்நீத்தவர்களின் வாரி சுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கேட்டு விண் ணப்பித்தோர்க்கு விரைந்து பணி நிய மனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருப் பூர் நெடுஞ்சாலைத்துறை கண்கா ணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று இப்போராட் டத்தை நடத்தினர். இந்த போராட்டம் குறித்து சாலைப்பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் ஆ.அம்சராஜ் கூறி யதாவது, 1997 ஆம் ஆண்டு முன் னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் சாலை பணியாளர்களுக்கு பணி  நியமனம் செய்து ஆணை வெளியி டப்பட்டது.

ஆனால் 2002 ஆம் ஆட்சி  மாற்றத்தால் ஜெயலலிதா அரசு, தனி யாருக்கு வழங்குவதாக கூறி ஆணையை ரத்து செய்ய சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் பணி  வழங்க வேண்டும் என் தீர்ப்பளித்தது.  இதையடுத்து அதிமுக அரசு உச்ச  நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய் தது. சாலை பணியாளர்களின் பல் வேறு போராட்டங்களால் அரசு வழக்கை திரும்ப பெற்று பணி நியம னம் வழங்கியது. இப்படிப்பட்ட தொடர் போராட்டங்களால் பெற்ற பணியை நாங்கள் ஆட்சிக்கு வந்து தான் வழங்கினோம் என பொதுப்ப ணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுவது கண்டனத்துக்குரியது. மேலும் தேர்தல் வாக்குறுதியாக 41  மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு. தற்பொழுது அரசு  செயலாளர் சட்டத்தில் இடம் இல்லை  என்று கூறுவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் கூறுகிறார். இந்த போக்கை கைவிட்டு 41 மாத  பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வலியுறுத்தி தொடர் போராட் டம் நடத்தவுள்ளோம் என்று கூறி னார். முன்னதாக இந்த போராட்டத் தில், மாநில துணைத்தலைவர் தி. ராஜமாணிக்கம் துவக்கவுரை ஆற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அ.ராணி, வாழ்த்திப் பேசி னார். சாலைப்பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ.அம் சராஜ் நிறைவுரை ஆற்றினார். கோட் டப் பொருளாளர் எஸ்.முருக சாமி நன்றி கூறினார். சாலை பணியா ளர்கள் திரளாக பங்கேற்றனர்.