districts

img

பாஜக மாவட்ட தலைவர், அதிமுக எம்எல்ஏ ஆக்கிரமித்த ரூ.229 சொத்துக்களை வருவாய்த்துறையினர் மீட்டனர்

கோவை, செப்.26- பாஜக கோவை மாவட்ட தலை வர் மற்றும் அதிமுக சிங்காநல்லூர் எம்எல்ஏ உள்ளிட்டோர் ஆக்கிரமித் திருந்த 229 கோடி ரூபாய் மதிப்புடைய உபரி நிலங்களை வருவாய்த்துறை  அதிகாரிகள்  மீட்டனர். கோவை, கொடிசியா அருகில் 10  புல எண்களின் கீழ் 45.82 ஏக்கர் புஞ்சை நிலங்கள் தமிழ்நாடு நில சீர்திருத்தம் மற்றும் நில உச்ச வரம்பு சட்டத்தின்படி  உபரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், கடந்த செப்.7  ஆம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அர சுக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வழங் கப்பட்டது.  இதனையடுத்து  இந்த நிலங் களை மீட்கக்கூடிய பணியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர். 229 கோடி ரூபாய் மதிப்புடைய இடங்களை வரு வாய்த்துறை அதிகாரிகள் மீட்டு அந்த  இடங்களில் அறிவிப்பு பலகைகளை நட்டனர். மீட்கப்பட்ட இடத்தில்  23 வீடுகள்  கட்டப்பட்டுள்ளது. அதில், ஒரு வீடு பாஜக கோவை மாவட்ட  பாலாஜி உத் தம ராமசாமிக்கு  சொந்தமான வீடு என்பதும், 20 வீட்டு மனைகளை சிங் காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப் பினர் ஜெயராம் விற்பனை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.