கோவை, ஜன.27- கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலகலமாக கொண் டாடப்பட்டது. நாட்டின் 75வது குடியரசு தினம் வெள்ளி யன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடிய ரசு தின கொண்டாட்டத்தில், ஆட்சியர் கிராந் திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரி யாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைக ளுடன் இணைந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறை அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப் பாக பணியாற்றிய 208 அரசுத்துறை பணி யாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவ லர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி னார். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர், காவல் கண்காணிப் பாளர் ஆகியோர்களும் காவல்துறை மரி யாதையை ஏற்று கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டம், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தேசியகொடியினை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் மற்றும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் சாந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.