districts

img

செங்கொடியே தனது உயிர் மூச்சாய் வாழும் தோழர்...

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டத்திற்குட்பட்டது ஜர்த்தல். இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் சி.பழனியம் மாள் வசித்து வருகிறார். அவருக்கு வயது 80ஐ கடந்து விட்டது. விவ சாய கூலித் தொழிலாளியான அவர் இன்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர் தான் வசிக் கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் கொடிக்கம்பத்தை உணர்வுப்பூர்வமாக பாதுகாத்து வருகிறார். ஒவ்வொரு மே தினத்தி லும் தவறாமல் தோழர்களை அழைத்து கொடியேற்றுவார். அதன்படி கடந்த மே தினத்திலும் ஜர்த்தலில் கொடி ஏற்றினார். கொடி யேற்றி ஒரு மாதம் கழித்து யாரோ கொடிக்கம்பத்தை பிடுங்கி கீழே வைத்து விட்டனர். இதைக் கண்டு  கடும் ஆவேசமடைந்த அவர் கட்சி யின் மேல் கமிட்டிக்கு உடனடியாக தகவல் அளித்தார். கட்சி கொஞ்சம்  பொறுமையாக விசாரியுங்கள், பின் னர் நடவடிக்கை எடுக்கலாம் என்று  வழிகாட்டியது. அவரும் மனம் நிலை கொள்ளாது அங்கும் இங் கும் விசாரித்து, இறுதியில் கொடிக் கம்பம் யாராலும் தவறான நோக் கத்தில் பிடுங்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் எடுத்து வைத்துள்ள னர் என்பது தெரிய வந்தது. ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட தற்கு, சாலையோரம் குழாய் பதிப் பதற்காக பாதுகாப்பாக அகற்றி னோம். கட்சி கொடி கம்பத்தை நாங் களே மீண்டும் அந்த இடத்தில் நட்டு கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதைக்கேட்ட பழ னியம்மாள் அப்போதைக்கு சமா தானமடைந்தார். ஆனால், ஊராட்சி  நிர்வாகத்தினர் உறுதியளித்தபடி கொடி கம்பம் நடவில்லை. பல முறை கேட்டு பார்த்தார் தோழர் பழனியம்மாள். நான்கு மாதங்கள் கடந்தது. பொறுமையிழந்த தோழர் போராட்டத்திற்கு தயாரானார். ஊராட்சி அலுவலகம் சென்று “நான் வயதானவள், என்ன செய்து விடு வேன் என்று சோதிக்கிறீர்களா? எங்கள் கொடிக்கம்பத்தை தேர்தல் நேரத்தில் காவல்துறை கூட என்னை அழைத்து தான் எடுக்கச் சொல் வார்கள். நீங்கள் தகவல் சொல்லா மல் எடுத்து விட்டீர்கள், சொன்ன படி கொடிக்கம்பத்தை நடவில்லை என்றால், நான் செங்கொடியுடன் அலுவலகத்தில் வந்து அமர்ந்து கொள்வேன், பிரச்சனை வீதிக்கு வரும்” என்று உறுதியாகக் கூறி யுள்ளார். இதையடுத்து, “கோபம் வேண் டாம் தோழர், நாங்கள் கொடிக்கம் பத்தை நட்டு தருகிறோம்” என்று தெரிவித்தத்துடன், மீண்டும் அதே இடத்தில் ஊராட்சி நிர்வாகம் சார் பில் கொடிக்கம்பம் நடப்பட்டது.

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்த தோழர் பழனியம்மாள் கொடியேற்று நிகழ்ச் சிக்கு உற்சாகமாக ஏற்பாடு செய் தார். அதன்படி வெள்ளியன்று கட்சி யின் அந்தியூர் தாலுகாச் செயலா ளர் ஆர்.முருகேசன், தாலுகாக் குழு உறுப்பினர் எஸ்.செபாஸ்டி யன் உள்ளிட்டோர் ஜர்த்தல்  சென்று மீண்டும் நடப்பட்ட கொடிக் கம்பத்தில் கொடியேற்றினர். தோழர் பழனியம்மாள் மிட்டாய்  வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு கம்பீரமாக கொடிக்கம் பத்தை பிடித்தபடி நின்றார். கொடி யேற்றியவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், அருகிலிருந் தவர்களுக்கும் மிட்டாய் வழங்கி மகிழ்ந்தார். கூடவே வாச்சாத்தி, கட் சியின் பட்டியலின - பழங்குடி மக் கள் மாநாட்டு தீர்மான மற்றும் கட்சி அமைப்பு தின பிரசுரங்களை பொது மக்களுக்கு கொடுக்க புறப்பட் டார். தோழர் பழனியம்மாளுக்கு புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி விடை பெற்றனர் தலை வர்கள். கடந்த ஜூலை மாதம் நடை பெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பின் போது தனது ஓய்வூதியத்தை செலுத்தி தீக்கதிர் சந்தாரர் ஆகி யுள்ளார் தோழர் பழனியம்மாள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக் கது. செங்கொடியே தனது உயிர் மூச்சு என வாழும் தோழர் பழனியம் மாள் என்றால் மிகையல்ல. -சக்திவேல், ஈரோடு