நாமக்கல், அக்.18- நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தைகளில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் களுக்கு ரூ.6.1 லட்சம் உடனடியாக வழங்கப் பட்டது. சேந்தமங்கலம் அருகே உள்ள துத்தி குளத்தில் வசித்து வருபவர் ராமசாமி உடையார் மகன் பன்னீர்செல்வம் (66). இவரும், மகள்களான திவ்யா (30), சரண்யா (27) ஆகியோரும் நாமக்கல்லில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவ னத்தில் (SMR Real Estates) வீட்டுமனை இடம் வாங்குவதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு பணம் செலுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சனையால் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது மூவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு நாமக்கல் நுகர்வோர் நீதி மன்றத்தில் தனித்தனியே வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவருக்கும் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டுத் தொகையை தனியார் நிறு வனம் வழங்கவில்லை. இந்நிலையில், இழப்பீட்டுத் தொகையை பெற்று தர வேண்டுமென மூவரும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தனித் தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக வழக்கறிஞர் முரளி குமாரை நடுவராக, நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் கடந்த மாதம் நியமனம் செய்திருந்தார். பேச்சுவார்த் தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஒவ்வொ ருவருக்கும் இழப்பீடாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை தனியார் நிறுவனம் புதனன்று வழங்கியது. இதைப் போலவே தவறான மருத்துவ சிகிச்சை வழங்கியதாக மருத்துவர் மீது 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், கோவை விமானம் நிலையம் அருகில் உள்ள நேரு நகரில் வசிக்கும் ஜெயபாலன் மனைவி கௌசல்யா (34) என்பவருக்கு இழப்பீடாக ரூ. ஒரு லட்சம் மற்றும் 6 ஆண்டுகளுக்கான வட்டி வழங்க வேண்டும் என கடந்த மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப் பினர் ரத்னசாமி ஆகியோர் உத்தரவு பிறப்பித் திருந்தனர். இது தொடர்பாக புதனன்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு வழக்கு தாக்கல் செய்த கௌசல்யாவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்டை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் வழங்கினார்.