தருமபுரி, ஏப்.18- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட டிஎன்வி நகரில் மழைநீர் கால் வாய் மற்றும் சாலை அமைக் கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சூழலில், தேங்கும் கழிவுகளால் பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தருமபுரி நகராட்சிக்குபட்ட டிஎன்வி நகரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. 15க்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்கள் உள் ளன. புதிதாக உருவான இப்பகுதி யில் தெருவிளக்கு, குடிநீர், கழிவு நீர் வடிகால், சாலை உள்ள எந்த வித அடிப்படை வசதிகளும் ஏற்ப டுத்தித் தரப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், சாலை வசதிக் காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கியபோது விரை வாக பணி முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று பொது மக்கள் எண்ணியிருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இந்நிலையில் ஆங்காங்கே எந்தி ரங்கள் மூலம் குழிகள் தோண்டப் பட்டதால் சாலைகளில் வாகனங் கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. குறிப்பாக, பாது காப்பற்ற நிலையில் ஆங்காங்கே குழிகள் உள்ளதால், பள்ளி செல் லும் குழந்தைகள், மாணவர்கள் பெரும் அச்சத்துடனேயே அச்சா லைகளை கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோடை மழை பெய்த தால் சேறும், சகதியுமாக சாலை மாறியுள்ளது. இன்னும் சில இடங்க ளில் தோண்டப்பட்ட குழிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் மையமாக மாறிவருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடன டியாக தலையிட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் வடி கால் மற்றும் சாலைப் பணிகளை விரைவாக செய்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.