திருப்பூர், மே 14 - திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்து மாறு நோட்டீஸ் வழங்கப்படு வதில் சொத்தைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் வகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வா கத்தின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற் படுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாளச் சாக்கடை கட் டணம் ஆகியவற்றை செலுத்து வதற்கு மாநகராட்சி வருவாய் உத வியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வரு கிறது. இதில் பழைய வரி பாக்கி ஏதும் இல்லாத நிலையிலும், நடப்பு ஆண்டுக்கான வரி செலுத்தக் கோரி கொடுக்கும் நோட்டீஸ்களும் மிரட்டும் தொனியில் உள்ளன. குறிப்பாக, அந்த நோட்டீஸில் “இக்கேட்பு அறிவிப்பு கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் தொகை செலுத்தப்பட வேண்டும். அப்படி செலுத்தப்படவில்லை என்பதற்கு நீங்கள் தகுந்த காரணம் காட்டாத நிலையில் உங்களுடைய சொத்தை பறிமுதல் செய்வதற்கு, கைப்பற்றாணை பிறப்பிக்கப் படும். அப்படி பிறப்பிக்கப்படும் ஒவ்வொரு கைப்பற்றாணைக்கும் கட்டணம் விதித்து வசூலிக்கப் படும். மேற்கண்ட வரியும், கட் டணமும் பின்னரும் செலுத்தப் படாமல் இருந்தால் உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படும். 1920ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 4 ஆவது அட்டவணையில் விதிகள் 30 முதல் 34 வரை பார்க்கவும்.” என்று குறிப்பிட்டுள்ளது.
சாமானிய நடுத்தரக் குடும்பத் தார் பெரும்பாலும் ஆண்டுதோறும் முறையாக வரி செலுத்தி வருகின் றனர். இந்த நிலையில் நிலுவை கட்டணம் ஏதும் இல்லாதபோதும், நடப்பு நிதியாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் உடனடியாக வரியை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சொத்தைப் பறி முதல் செய்ய நடவடிக்கை எடுப் போம் எனக் குறிப்பிட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும், அதிருப்தி யையும் ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மாநகராட்சி மேயரிடம் கேட்டபோது, அவசரப் பணியில் இருந்த அவர், சொத்தை பறிமுதல் செய்வதாக நோட்டீஸ் கொடுப்பது தவறு” என்று குறிப் பிட்டார். அத்தகைய நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தால் தனது கவனத்துக்கு கொண்டு வரும்படி யும் அவர் கேட்டுக் கொண்டார். திருப்பூர் மாநகராட்சியில் ஏற் கெனவே சொத்து வரி உயர்த்தப் பட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உயர்த்தப்பட்ட வரி ஒருபுறம் இருக்க, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் (எஸ்யூசி) என்று தனி யாக ஒரு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு, அதுவும் பெரும் தொகை யாக உள்ளது. அத்துடன் குடிநீர், பாதாளச் சாக்கடை கட்டணம் என்று மொத்தமாக பல ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் செலுத்த வேண்டிய நிலையில், கட்டிட உரி மையாளர்கள் பலருக்கு இது பெரும் சுமையாக உள்ளது.
அதேசமயம் திருப்பூர் தொழில், வர்த்தக நிலையும் மிகவும் சரிவைச் சந்தித்து உள்ளதால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இத் தனை சிக்கல்களுக்கு இடையிலும் கணிசமான மக்கள் எப்படியாவது முயற்சி செய்து இந்த வரி இனங் களை நிலுவை இல்லாமல் முறை யாக செலுத்தி வருகின்றனர். வழக்கமாக நிதியாண்டு தொடங் கிய உடன் வரி செலுத்துவோர் மிகவும் குறைவுதான். பெரும்பா லானோர் அரையாண்டு சமயத்தில் அல்லது நிதியாண்டு முடியும் தரு வாயில் தங்கள் வரியை செலுத்தி வருகின்றனர். அதேசமயம் மிகப்பெரும் நிறு வனங்கள், மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்கள் நடத்தக் கூடிய பலர் தங்கள் சொத்து மதிப்புக்கு உரிய வரியை செலுத் தாமல் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மிகவும் குறைத்து நிர்ணயித்து வைத்திருப்பதுடன், அந்த வரியையும் உரிய காலத்தில் செலுத்தாமல் பெரும் தொகையை நிலுவையாக வைத்திருக்கின் றனர். கடந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின்போது கூட, ஒரு தனி யார் மருத்துவமனை, ஒரு பின்ன லாடை நிறுவனம் ஆகியவற்றை குறிப்பிட்டு எப்படி வரியை குறைத்து நிர்ணயித்து ஏமாற்று கின்றனர் என்று மேயர் ந.தினேஷ் குமார் சுட்டிக்காட்டினார். அது போல் மாநகராட்சியை ஏமாற்றக் கூடியவர்கள் மீது சொத்தைப் பறி முதல் செய்வோம் என்று நடவ டிக்கை எடுத்தால் கூடப் பாராட்ட லாம். ஆனால், அத்தகைய எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
அவர்களை விட்டுவிட்டு சாமா னிய மக்களிடம் முறைப்படி வசூ லிக்க வேண்டிய வரியினத்திற்கு மிரட்டல் கடிதம் விடுப்பது மாநக ராட்சி நிர்வாகத்தின் மீது மக்க ளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் சிலர் இந்த விசயத்தை சுட்டிக் காட்டி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். சிலர் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த மிரட்டல் நடவடிக்கைக்கு எதிர் வினையாக, நாங்கள் செலுத்த வேண்டிய வரியை உரிய காலத் தில் செலுத்த மாட்டோம் என்று கூறி யுள்ளனர். ஏமாற்றுவோரை விட்டு விட்டு, சாமானியர்களை மிரட்டி இத் தகைய சொத்து வரி கேட்பு அறி விப்பு வழங்கியிருப்பதில் மாநக ராட்சி ஆணையர் கையெழுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கவனத்துக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, தொடர்புடைய அதிகாரி கள் மீது மாநகராட்சி மேயர் விசா ரணை நடத்தி இந்த நோட்டீஸை திரும்பப் பெறுவதற்கும், மிரட்டல் தன்மை இல்லாமல் உரிய முறை யில் வரி கேட்பு நோட்டீஸை தயா ரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டு களாக கோடிக்கணக்கில் வரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுப்ப தையும் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே, திருப்பூர் மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.