திருப்பூர், ஜூன் 5- திருப்பூர் பல்லடம் சாலையில் தென்னம்பாளை யம் சந்தை உள்ளது. இந்த சந்தையில் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டவை விற் பனை செய்யப்படுவது வழக் கம். மற்ற நாட்களை விட விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை சந்தையில் அதிக கூட்டம் அலைமோதும். இந்நிலை யில் ஞாயிறன்று சந்தையில் மீன் வாங்க ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். இதனால், மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதன்படி ஒரு கிலோ பாறை மீன் ரூ.140 க்கும், கட்லா ரூ.140க்கும், ரோகு ரூ.140க்கும், கிலங்கா ரூ.150க்கும், முரல் ரூ.300க்கும், மத்தி 150க்கும், நண்டு ரூ.250க்கும், இரால் ரூ. 420க்கும் விற்பனை செய்யப்பட்டது.