சேலம், நவ.14- சேலம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுடியிலுள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக குடியி ருப்பு பகுதியில் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். சேலம் மாநகரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இடைவிடாத கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதி யில் ஏறி நிரம்பி உபரிநீர் ஊருக்குள் புகுந் துள்ளது. மேலும், சேலம் - இளம்பிள்ளை சாலையில் உள்ள பனங்காடு ஆண்டிபட்டி ஏரி நிரம்பி, உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்டிபட்டி, சத்யா நகர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடு களுக்குள் தண்ணீர் புகுந்ததால், வீட்டில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், உடைமைகள் மற்றும் குழந்தைகளின் பாட புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்தது. தற்பொழுது அந்த வீடுகளிலிருந்து பொதுமக்கள் மீதமுள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் உறவினர் இல் லங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஒரு சில நபர்கள் மட்டும் மீட்கப்பட்டு அங் குள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள னர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழு தும் இந்த ஏரி நிரம்பி, உபரிநீர் முழுவதும் இந்த குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக சேலம் மேற்கு வட்டாட்சியர் அருள் பிரகாஷ் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆய்வு செய்ய வந்தவர்களை முற்றுகையிட்டு வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த கொண்டலாம்பட்டி காவல் துறையினர் அப்ப குதிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், மழைநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகள வில் உள்ளது. எனவே, இந்த பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியி லிருந்து வெளியேற்றப்படும் நீர் முறையாக செல்ல அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.