districts

கள்ளக்கிணறு படுகொலை குற்றவாளிகள் கைது முரணான தகவல்களை கசியவிட்ட காவல் துறை

திருப்பூர், செப். 7 - பல்லடம் அருகே கள்ளக்கிணறு  நால்வர் கொலை வழக்கில் முக்கிய  குற்றவாளியான வெங்கடேஷ் என் பவர் கைது செய்யப்பட்டார். இந்த  வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்ப தில் முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்களை வெளிப்படுத்தி காவல் துறையினரே குழப்பம் ஏற்ப டுத்தினர். பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஞாயிறன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி ஏற்படுத்தியது. திங்க ளன்றே செல்லமுத்து என்ற குற்ற வாளியை காவல் துறையினர் கைது  செய்ததாகத் தெரிவித்தனர். ஆரம்பத்தில் காவல் துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் செல் லமுத்து, வெங்கடேஷ், விஷால்  ஆகிய மூன்று பேர் கொலை குற்றவா ளிகளாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதனன்று மேலும் இருவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தக வல் வெளியானது. அவர்கள் வெங்க டேஷ், விஷால் என்று முதலில் தெரி விக்கப்பட்டது, காவல் வட்டாரத் தில் தொடர்பு கொண்டு செய்தியாளர் கள் உறுதிப்படுத்த முயன்றபோது எந்த தகவலையும் அவர்கள் தெரி விக்காமல் தவிர்த்தனர். திருப்பூர் மாநகர காவல் துறையில் இருவர் சர ணடைந்தனர்.

அவர்கள் மாவட்ட  காவல் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சரணடைந்தவர்களில் விஷால் என்பவருடன், வெங்கடேஷின் தம்பி  ராஜ்குமார் என்பவர் இருந்ததாகவும், அவரும் கொலையில் தொடர்பு டையவர் என்றும் காவல் துறையில்  அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரி விக்கப்பட்டது. ஏற்கெனவே காவல் துறை செய்திக்குறிப்பில் இல்லாத புதிய நபர் தொடர்பிருப்பதாக கூறப் பட்டது. அதேசமயம் ஐந்தாவது நப ராக வெங்கடேஷின் அப்பா ஐயப்பன்  என்பவர் கைது செய்யப்பட்டதாக வும் புதன்கிழமை மாலை தெரியவந் தது. முதலில் குற்றவாளிகள் மூவர் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பிற்பாடு ஐந்து பேர் என்று தகவல்  தெரிவித்தது குழப்பம் ஏற்படுத்துவ தாக இருந்தது. ஆனால் இந்த விபரங் களை உறுதிப்படுத்த பொறுப்புள்ள அதிகாரிகள் யாரும் பதில் அளிக்க வில்லை. இதற்கிடையே வியாழக்கிழமை காலை வெங்கடேஷ் என்பவர் கைது  செய்யப்பட்டதாக மாவட்ட காவல்  துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்லடம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் சாமிநா தன் முறையான அழைப்பில்லாமல் திடீர் செய்தியாளர் சந்திப்பை நடத் தினார். அப்போது வெங்கடேஷ் கைது செய்யப்பட்ட பிறகு, தப்பி ஓட  முயற்சித்ததாகவும், சிறு துப்பாக்கி  சூடு நடத்தி அவரைப் பிடித்ததாகவும்  எஸ்.பி. தெரிவித்தார். இதன்மூலம் புதன்கிழமை காவல்  வட்டாரத்தில் கசியவிடப்பட்ட தக வல் முற்றிலும் திசை திருப்பும் நோக் கத்தில் பரப்பப்பட்டதாக தெரிகிறது.  வெங்கடேஷின் தம்பி ராஜ்குமார் என்று சொல்லப்பட்டது உண்மை யில்லை.

வடக்கு காவல் நிலையத் தில் அவர்கள் சரணடைந்த விபரமும் தெளிவாக உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. எஸ்.பி. சாமிநாதன் அதிகாரப்பூர் வமாக கொடுத்த செய்தியாளர் சந் திப்பில், குற்றவாளிகள் நால்வர் என் றும், வெங்கடேஷ், செல்லமுத்து, விஷால் என்கிற சோனை முத்தையா  மற்றும் வெங்கடேஷின் அப்பா ஐயப் பன் ஆகிய அந்த நால்வரும் கைது  செய்யப்பட்டு விட்டனர் என்று உறு திப்படுத்தினார். இந்த வட்டாரத்தை உலுக்கிய முக்கிய கொலை வழக்கு என்பதால்  குற்றவாளிகளைப் பிடிக்க வேண் டும், அவர்கள் தப்பி விடக் கூடாது  என்று காவல் துறையினர் கவன முடன் செயல்பட வேண்டியது புரிந்து  கொள்ள முடிகிறது. அதேசமயம் இந்த விசயத்தில் முன்னுக்குப் பின்  முரணான தகவல்கள் காவல் துறை  வட்டாரத்தில் இருந்தே தெரிவிக்கப் பட்டது ஏன் என்ற கேள்வி எழு கிறது. ஊடகங்கள் முந்திக் கொண்டு  செய்தி தர வேண்டும் என பரபரப்புக் காக செயல்பட்டாலும், காவல் துறை யினர் கவனமுடன் செயல்பட்டு இது  போன்ற குளறுபடிகளைத் தவிர்த்தி ருக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற் பட்டு குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தக் கூடும் என்று வழக்கறிஞர்கள் கூறினர். குற்றவாளிகளுக்கு தண்டனை  பெற்றுத் தரவும், நம்பகத்தன் மையை பாதுகாக்கவும் திருப்பூர் மாவட்ட காவல் துறை உரிய கவனம்  செலுத்த வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பாப்பு ஆகும்.