திருப்பூர், ஆக.27 - திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்கள் பயன் படுத்தும் கழிவறை தூய்மை இல் லாமல் படுமோசமான நிலையில் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இப் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். மாநகர மேயர் ந.தினேஷ் குமார் இப்பிரச்சனையை கவனித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு அருகிலேயே கருவம் பாளையத்தில் மாட்டுக்கொட்டகை எனப் படும் இடம் உள்ளது. ஆரம்ப காலத் தில் மாட்டு வண்டிகள் நிறுத்தும் கொட்டகையாக இருந்த இந்த இடம், தற் போது மாநகராட்சி வாகனங்கள் நிறுத் தும் இடமாகவும், 43ஆவது வார்டு தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவுக்கு கூடும் இடமாகவும் உள்ளது.இங்கேயே சுகாதார அலுவலர் (எஸ்.ஓ.) அலுவலகமும் இயங்கி வருகிறது. மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என தினந்தோறும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இங்கு செல்கின்றனர். இவர் கள் பயன்படுத்துவதற்கு மாட்டுக் கொட்டகை வளாகத்திற்கு உள்ளேயே நான்கைந்து கழிப்பறை மற்றும் குளிய லறைகள் உள்ளன. ஆனால் மனிதர்கள் பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் பார்ப்பதற்கே மிக மோசமாக, அரு வெறுப்பாக முற்றிலும் பராமரிப்பு இல் லாமல் இந்த இடம் உள்ளது. கழிவறைகளுக்கு கதவு இல்லை. தண்ணீர் குழாய்கள் பழுதடைந்துள்ளன. கழிப்பறை தூய்மை இல்லாமல் அழுக் கேறி ஆண்டுக்கணக்கில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. வெளியாட்கள் யாரேனும் தப்பித்தவறி உள்ளே போய்ப் பார்த்தால் குமட்டிக் கொண்டு வாந்தி எடுத்துவிடுவார்கள். அத்துடன் கழிவுநீர் வெளியேறிச் செல்லும் குழாய்களும் பழுதடைந்துள்ளன. சுகாதார சீர்கேடான முறையில் சாக்கடைக் கழிவுநீர் அப் பகுதியில் குளம் போலத் தேங்கி இருக் கிறது.
ஊர் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகாலை எழுந்து வந்து வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறை, குளிய லறைகளின் அவலநிலையைப் பார்ப்ப தற்கே வேதனையாக உள்ளது. இது பற்றி தூய்மைப் பணியாளர் நாக ராஜ் என்பவரிடம் கேட்டபோது, அங்கு சுமார் நூறு பேர் தினமும் வந்து செல் கின்றனர். இதில் 30 பேர் பெண் தொழி லாளர்கள். காலை 6 மணிக்கு, மதியம் 2 மணிக்கு வந்து வருகை பதிவை உறுதிப் படுத்தி கையெழுத்து இட்டுச் செல் கின்றனர். இது தவிர மாநகராட்சி வாகன ஓட்டுநர்களும் அங்கு உள்ளனர். மாட்டுக் கொட்டகை காவலர்கள் இருவர் அங்கேயே வேலை செய்கின்றனர். ஒவ் வொரு நாளும் நூறு பேர் வரை வேலை செய்ய வந்து செல்லும் இந்த இடத்தில் உள்ள கழிப்பறையை முறையாகப் பரா மரிக்காமல் உள்ளனர். ஏற்கெனவே இங்கி ருந்த கழிப்பறை மிக மோசமாக இருந்த தால் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு புதி தாக கழிப்பறை, குளியலறை கட்டப் பட்டது. ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்தனர். எனினும் முறை யாக தொடர்ந்து பராமரிக்கப்படாததால் அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகளைப் பொறுத் தவரை நாங்கள் வேலை செய்வதைப் பற்றி மட்டும்தான் கவனிப்பார்கள். எங்கள் அடிப்படைத் தேவை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படமாட்டார்கள். இங்கிருக்கும் நிலையே அதிகாரிகளுக் குத் தெரியாது. அதிகாலை வேலைக்கு வரக்கூடியவர்கள், குறிப்பாகப் பெண் கள் காலைக் கடன் கழிப்பதற்கோ, அவ சரத்திற்கு இயற்கை உபாதை போக்கு வதற்கோ இங்கு வழியில்லை. அவசரம் என்றால் வெளியே உள்ள பொதுக் கழிப்பிடத்திற்குத்தான் போக வேண்டும். வேலை முடித்து குளித்துவிட்டுப் போக லாம் என்றால்கூட இங்கு வழியில்லை. என் றார். அதேபோல் மற்றொரு தொழிலாளி வாஞ்சிநாதன் என்பவர் கூறுகையில், கழிப்பறை கள் மிக மோசமான நிலையில் உள்ளது பற்றி ஏற்கெனவே மாநகராட்சி ஆணை யருக்கு புகார் தெரிவித்தோம். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிப்பிடம், குளியலறை நிலைமை இப்படி இருக்கிறது என்றால், அங்கே எங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வசதி யும் இல்லை. ஒரு குடிநீர் குழாய் உள்ளது. அங்கு 8,9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வரும். அப்போது கேன்களில் பிடித்து வைத்துத்தான் குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. தனியாக குடிநீர் வசதி இல்லை. கழிவறைகளில் கதவு இல்லை, தூய்மையாக பராமரிப்பது இல்லை என்பதுடன் விளக்கு வசதியும் இல்லை. அதே சமயம் அதிகாரிகளுக்கு அவர் களது அறையிலேயே தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. அதிகாரிகள் ஓரிருவருக்கு உரிய வசதியை கவனித்துக் கொள்ளும் நிலை யில் நூறு பேர் வரை பயன்படுத்த வேண்டிய வசதிகளை பற்றி கண்டுகொள் ளாமல் உள்ளனர், என்றார். இந்த நிலை பற்றி மாநகராட்சி சுகா தார அலுவலர் முருகனிடம் கேட்ட போது, தூய்மைப் பணியாளர்கள் 30 பேர், ஓட்டுநர்கள் 50, 60 பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கழிப்பறை வசதி உள்ளது என்றார். அங்குள்ள அவலநிலை பற்றி கூறியபோது, அவர் அதை அறிந்திருக்க வில்லை என்பது தெரிந்தது. தண்ணீர் வசதி உள்ளது. கழிப்பறைகளை பரா மரித்து பயன்படுத்த ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார். அதிகாரி வேலை செய்யும் அதே இடத்திலேயே அவல நிலை இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பது மோச மானது. இப்பிரச்சனையில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.