districts

img

சென்னை மக்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்: அமைச்சர் நேரு

சென்னை, ஆக,30- நகரின் குடிநீர் கட்டமைப்பை மாநில அரசு பலப்படுத்தி வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சென்னை தேனாம்பேட்டை லிட்டில் பிளவர் கான்வென்டில் நெதர்லாந்து அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் சமநிலை முன்மாதிரி திட்டத்தை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு விரிவாக்கும் திட்டத்தை புதன்கிழமை (ஆக.30) தொடங்கிவைத்து அவர் பேசிய தாவது ;  தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள  7 கோடிப் பேருக்கு பணியாற்றி வரு கிறது. மாநிலத்தில் குடிநீர் வழங்கு வதற்கு மட்டும் இந்தாண்டு 40ஆயிரம் 8 கோடி  ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கித்தந்துள்ளார். தண்ணீர் மறுசூழற்சிக்காக தமிழகத்தில் ஆயிரம் குளங்கள் திட்டத்திற்காக  சென்னையை தேர்ந்தெடுத்த நெதர்லாந்து அரசுக்கு மாநில அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம்  மட்டும் 528 இடங்களில் ஆழ்  துறை கிணறுகள் அமைத்து  மக்க ளுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கி வருகிறோம்.சென்னையை பொறுத்த வரை 25 லட்சம் மக்களுக்கு நாள்தோறும் ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கி வருகிறோம். தமிழகத்தில் 80 விழுக்காடு மக்களுக்கு சுத்திகரிக்கப் பட்ட  தண்ணீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த தண்ணீர் கழிவுநீராக மாறிய பின்னர் அங்காங்கே கழிவு நீர்சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மறுபடியும் சுத்தம் செய்து நீர்நிலை களுக்கு கொண்டு செல்லும் பணி களை சென்னையில் மட்டும் 800க்கும் மேற்பட்ட இடங்களில் செய்கி றோம். சிறுநகரங்களில் கழிவுநீரை சுத்தம் செய்து வேறுசில நோக்கங்க ளுக்கு அந்த தண்ணீரை பயன்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.

குடியிருப்புகளில் சேரும் கழிவு நீரை பல்வேறு வகையில் சுத்தி கரித்து தோட்டங்கள் மற்றும் பிளஷ் அவுட் கழிவறைகளுக்கு பயன்படுத்தும்போது தண்ணீர் சேமிக்கப்படுகிறது. சென்னையில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்க 100எம்எல்டி, 110எம்எல்டி, 180எம்எல்டி, 400 எம்எல்டி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் சென்னைக்கு ஒருநாளைக்கு 2000எம்எல்டி தரும் வகையில் கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறோம். இந்த அளவு தண்ணீரை கொடுத்தபின்னர் 20 விழுக்காடு தண்ணீர்தான் வீணாகும். மீதமுள்ள 80விழுக்காடு தண்ணீரை மறுபடியும் சுத்திகரித்து நிலத்தில் விட்டுவிடலாம் என்று அதி காரிகள் சொல்லியிருக்கிறார்கள். அதை நோக்கித்தான் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கே.என்.நேரு பேசினார். இந்த நிகழ்ச்சியில் நெதர்லாந்து நாட்டிற்கான சர்வதேச நீர் விவ காரங்களுக்கான முதல் சிறப்பு தூதர். ஹெங்க் ஓவிங்க், நெதர்லாந்து துணை தூதர் எவூட் டி விட், ஜெர்மனி துணை தூதர் மைக்கேல் குச்லர் ஊஸ்  கட்டிட வடிவமைப்பு மற்றும் நகர வடிவமைப்புக்கான இயக்கு நரும் மற்றும் “ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை” அமைப்பின் குழு தலைவருமான ஏவா ஃபென்னஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.