கோவை, ஜன.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலு வலகங்கள், மக்கள் தங்களது பிரச்சனை களை முறையிடுகிற இடமாக மாறும் என சிபிஎம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் மேற்கு, நஞ்சேகவுன்டன்புதூர் கிளை புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா ஞாயிறன்று, எஸ்.எஸ்.குளம் மேற்கு நகரக் குழு உறுப்பினர் கே.சண்முகசுந்தரம் தலை மையில் நடைபெற்றது. எஸ்.ரமேஷ் வர வேற்றார். கட்சியின் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் கட்சி கொடியை ஏற்றி வைத் தார். அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். கோபால், எஸ்.எஸ்.குளம் மேற்கு நகரக் குழு உறுப்பினர் ஆர்.சுந்தரம் ஆகியோர் கல் வெட்டினை திறந்து வைத்தனர்.
கோவை மாமன்ற உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி, சுமதி ஆகியோர் தலைவர்கள் படங்களை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், இப்பகுதியில் அலுவலகம் இருப்பது மக்கள் தங்களுடைய பிரச்சனை களை முறையிடுகின்ற இடமாக மாறும். கட்சி யின் வர்க்க, வெகுஜன அணிகளுக்கு செயல் படும் இடமாக உதவும். நாம் சொல்லுகின்ற கருத்துக்களை மக்கள் காதுகொடுத்து கேட் டாலே பல பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும். நாம் எல்ஐசியில் தனியார் துறை அனுமதிக்ககூடாது என்றும், மக்கள் பணத்தினை பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறி வந்தது. ஆனால், அதனை கேட்காதவர்கள் தற்போது உணர்ந் திருப்பார்கள். கடந்த சில தினங்களாக அதா னியின் பங்கு விலை குறைவது மட்டுமல்ல, எல்ஐசியின் முதலீடு கோடிக்கணக்கில் நட் டம் ஏற்பட்டுள்ளது, என்றார். இதைத்தொடர்ந்து கட்சி கிளையின் மூத்த தோழர்கள், குடும்பத்தினர் கெளரவிக்கப் பட்டனர். மேலும், ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கி சூட்டில் குண்டடிபட்டு காயமடைந்த காளியப் பன் மற்றும் முருகன், மில் தொழிலாளி ரங் கண்ணன், டிபிஎஸ் மில் தொழிலாளி மருதா சலம், கிளைப்பகுதியில் ஆரம்ப காலங்களில் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி மாவட்டக் குழு உறுப்பினராக இருந்து, பின்னர் கட்சி யின் அறிமுகமாக திகழ்ந்த எஸ்.நடராஜன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். இறுதி யாக, நகரக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.