districts

img

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம் காலிக்குடங்களுடன் மக்கள் முற்றுகை

அன்னூர், ஜூலை 26- அன்னூர் அருகே முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி பொது மக்கள் காலிக்குடங்களுடன் அன்னூர் ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குப்பனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 7 ஆவது வார்க்குட்பட்ட அழகேபாளையம், ஏடி காலனி பகுதி யில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி யாற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநி யோகம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில், அழகே பாளையம் கிராமத்திற்கு தினசரி 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருவதாக கூறப்படு கிறது. மேலும், போர்வெல் குடிநீரும் கூடுதலாக வழங்கி வந்த  நிலையில், கடந்த 20 நாட்களாக எந்த குடிநீரும் இந்த கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித் தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர் கவிதா தலை மையில் காலிக்குடங்களுடன் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தினை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு வந்த அன்னூர் போலீசார் மற்றும் ஒன்றியப் பெருந்தலைவர் அம்பாள் பழனிச்சாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது விரைவில் புகார் குறித்தும், குடிநீர் பிரச்சனை குறித் தும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக் கப்பட்டது. இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.