சேலம், நவ.22- குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்காக, சேலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னயினர் கையெழுத்து பெறும் இயக் கத்தில் ஈடுபட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குடி யரசு தலைவரிடம் கோரிக்கை சாசனம் அளிப்பது என்கிற அடிப்படையில், சேலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். சேலம் சிறைத் தியாகிகள் நினைவகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில், மாவட்ட செயலாளர் வி.இளங்கோ, சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப் பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.