தருமபுரி, டிச.24- பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வலி யுறுத்தி, டிச.27ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத் தில் திரளாக பங்கேற்பது என அரசு ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி வுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சி. காவேரி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட நிர் வாகிகள் கே.புகழேந்தி, முனிராஜ், கிருஷ்ண மூர்த்தி, தேவகி, பிரபாகரன் உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர். இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்ட த்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். அவுட்சோர்சிங் ஒப்பந்த முறை யை கைவிட்டு நிரந்தர பணிக்கு ஆள் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர்-27 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில், அனைத்து துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பங் கேற்க செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.