districts

தொட்டபெட்டாவின் உச்சியில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி

உதகை, ஆக.27- ‘ஹர் ஷிகர் திரங்கா’ குழுவினர் 19 ஆவது மாநிலமாக தொட்டபெட் டாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களை கடந்த ஒரு வருடமாக செய்து வந்தன.  ‘ஆசாதி கா அமிர்த மகோத்சவ்’ என்ற பெயரில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சுதந்திர தினம் தொடர்பான கொண் டாட்டங்கள் இந்தியாவில் நடை பெற்று வருகின்றன. இதன்ஒரு பகுதியாக அனைத்து இல்லங்களி லும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்  என்பதற்காக ‘ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இதை  முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த இயக்கத் திற்கு ஆதவராக தங்களுடைய இல் லங்களில் தேசியக்கொடியை ஏற்றி னர். இதேபோல் ‘ஹர் ஷிகர் திரங்கா’ என்ற பெயரில் இந்தியாவின் ஒவ் வொரு மாநிலத்தின் மிக உயரமான இடத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக கர்னல் ரன்வீர் சிங் ஜாம் வால் தலைமையில் 15 பேர் அடங்கிய ராணுவ குழுவினர் இந்தியா முழுவ தும் பயணம் மேற்கொண்டு வரு கின்றனர். 50க்கும் மேற்பட்ட வெற்றி கரமான மலை பயணங்கள் மேற் கொண்டுள்ளார். இந்நிலையில், ‘மிஷன் ஹர் ஷிகர் திரங்கா’ முதலாவது பயணத்தை அருணாச்சலப் பிரதேச முதல்வர் நிமாஸ், திராங்கில் இருந்து கடந்த மே மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து 18 ஆவது மாநிலமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மலையனகிரி சென்ற இந்த குழுவினர், 19 ஆவது மாநிலமாக தமிழகத்தில் உள்ள மிக உயரமான சிகரமான 2623 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டாவுக்கு வந்த னர். அக்குழுவினரை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப் பின் தலைவர் சாதிக் தலைமையி லான குழுவினர் வரவேற்றனர். இதன் பின் தொட்டபெட்டா சிகரத்தில் கர் னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமை யிலான ராணுவ வீரர்கள், தன்னார் வலர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதன்பின் 20 ஆவது மாநிலமாக கேரளா மாநிலத்தில் உள்ள ஆனை முடி சிகரத்திற்கு அந்த குழுவினர் புறப்பட்டு சென்றனர். இறுதியாக சிக் கிமில் உள்ள ஜாங்சாங் மலையில் இந்தக் குழுவினரின் பயணம் முடி வடைய உள்ளது. ராணுவ குழுவின் இந்த முயற்சிக்கு அங்கு வந்த சுற் றுலா பயணிகள் வாழ்த்து தெரிவித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.