ஈரோடு, ஜன. 13- ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத் தப்படும் திட்டங்கள் பற்றிய ஆய்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இணைத்தலைவர். திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாநி லங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப. செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், சட்டமன்ற உறுப்பினர் கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம், சி.கே.சரஸ் வதி, ஆகியோர் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப் புத்திட்டம் (ஊரகம்) உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.