திருப்பூர், செப்.19 - மின் கட்டண உயர்வை திமுக அரசு திரும் பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பல்லடம்
பல்லடம் கொசவம்பாளையம் சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்டோர் பேசினர். திர ளானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரக்குழு சார்பில் புதிய பேருந்து நிலை யம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந் திரன் தலைமை ஏற்றார். இதில் மின் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தி மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி ஆகியோர் உரையாற்றினர். பெருந்திரளானோர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கைவிட வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
வேலம்பாளையம்
திருப்பூர் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் பெரியார் காலனி சந்திப்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரக் குழு உறுப்பினர் த.நாகராஜன் தலைமை ஏற் றார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால் ஆகியோர் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி உரை யாற்றினர். இதில் பெருந்திரளான பெண்கள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வீரபாண்டி பிரிவு
திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் வீரபாண்டி பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் தலைமை ஏற்றார். இதில் இடு வாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணே சன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் டி. உமாசங்கர் மற்றும் தமுஎகச மாவட்டச் செய லாளர் ஆர்.குமார், கட்சியின் ஒன்றியச் செய லாளர் சி.மூர்த்தி ஆகியோர் உரையாற்றி னர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட்சுமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பாண்டியன் நகர்
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பாண்டி யன்நகரில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.இளங்கோ தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் அ.சந்தோஷ், சிஐடியு பஞ் சாலை சங்கத் தலைவர் கே.பழனிச்சாமி ஆகி யோர் உரையாற்றினர். இதில் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.
அவிநாசி
அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் அ.ஈஸ் வரமூர்த்தி, சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துச் சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகம், தேவி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சாமியப்பன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சிலை முன்பு என்.முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட் ராமன், கி.மேகவர்ணன், செங்குட்டுவன், சீரங்கராயன், ராஜேந்திரன், ஆ.மணியன், கோவிந்தராஜ், கண்ணுச்சாமி உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கேயம்
காங்கேயம் பேருந்து நிலையம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பி னர் எஸ்.தங்கவேல் தலைமை ஏற்றார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங் கடசாமி, தாலுகா குழு உறுப்பினர் எஸ்.ராதாகிருஷ்ணன், அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி ஆர். நாச்சிமுத்து ஆகியோர் மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்திப் பேசினர். கட்சி அணியினர் கலந்து கொண்டனர்.