districts

img

இளம் பெண் படுகொலை விவகாரம் ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி மனு

நாமக்கல், மே 25- இளம் பெண் படுகொலை விவகாரத்தில் நேர்மையான விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்வதற்கு ஆட்சியர் உரிய தலையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமாவிடம்  மார்க் சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.வேலுச்சாமி, கே.தங்கமணி உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில் தெரிவித் துள்ளதாவது, பரமத்தி வேலூர் வட்டம்,, வடகரையாத்தூர் ஊராட்சி பட்டதாரி இளம் பெண் படுகொலை வழக்கில், தொடர் புடைய உண்மை குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலையான இளம் பெண்ணின், குடும்பத்தாருக்கு  நிதி உதவி வழங்கிடவும் மற்றும் அப்பகுதியில் நடை பெற்று வரும் வன் செயல்களை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய  நிவாரணம்  கிடைத்திடவும், தீ வைப்பு சம்பவத்தில் மரணம டைந்த வட மாநில தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிட வேண்டும். அப்பகுதியில் அமைதி திரும்ப தொடர்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவ ட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான  அரசு மருத்துவ கல்லூரியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். உயர்  சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு அருகாமை மாவட்டங்களுக்கு, நாமக்கல் மாவட்ட மக்கள் சென்று அவதிப் படும் நிலையினைப் போக்கிட, நாமக்கல் அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப் பட்டுள்ளது.