சேலம், ஆக.9- சேலம் அருகில் அருந்ததிய மக் கள் செல்லும் பாதையின் ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரி மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் சங்ககிரி ஆதிதிராவிடர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட் டத்திற்கு எடப்பாடி கே.நடராஜன் தலைமை வகித்தார். இந்த போராட் டத்திற்கு சி.மாதையன், எம்.கண்ணன், வெங்கடேஷ், எம்.கந்த சாமி, சித்துராஜ், சாமியப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா கோரிக்கைகளை விளக்கி பேசினார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், இருப் பாளி கிராமத்திற்குட்பட்ட பாரக் கல்லூர் தமிழ்நாடு ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் கடந்த 2006ஆம் ஆண்டு 30 அருந்ததிய குடும்பத்தினருக்கு 2 ½ சென்ட் வீட்டு மனைக்காக நிலம் வழங்கப் பட்டன. இந்த நிலத்தில் 10 அடி அகலத்தில் பாதைக்கான நிலமும் வழங்கப்பட்டன. ஆனால் சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள் ளனர். இதனால் பட்டா பெற்ற அருந்ததிய மக்கள் 17 ஆண்டு களாக அவ்வழியாக செல்வதை தடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன் வரவில்லை. இதோபோல், பாரக்கல்லூர் பகுதி இறப்பு நிகழ்வுகளின் போது சுடுகாட்டிற்கு பிணங்களை எடுத்துச் செல்லும் பாதையை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழை காலங்களில் ஓடை யில் தண்ணீர் இருந்தால் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வீட்டுமனை மற்றும் சுடு காட்டிற்கு பாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. இத்தகவலறிந்து வந்த ஆதி திராவிடர் நலத்துறை தனி வட் டாட்சியர் லெனின், பாதை அமைப் பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறித்து விளக்கிப் பேசினார். மேலும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவ னத்துக்கு கொண்டு செல்வதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.சேகர், ஜி. கணபதி, மாவட்டக்குழு உறுப்பி னர்எஸ்.முத்துசாமி, எடப்பாடி தாலுகா செயலாளர் மு.பெரி யண்ணன், சங்ககிரி தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம், டி. மூர்த்தி, அ.மோகன்ராஜ், என்.ஜெயவேல், எஸ்.ஜலபதி, மு. இளவரசன், திருமா.முருகேசன், ஜே.கிருபாகரன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.