தருமபுரி, ஜூலை 22- இண்டூரை தனி ஒன்றி யமாக உருவாக்கிட வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் இண்டூர் பகுதிக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூர் பகுதிக் குழு கூட்டம் இண்டூரில் சனி யன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, பகுதிச் செய லாளர் சிவப்பிரகாசம் தலைமை ஏற்றார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்டு இண்டூர் உள்ளது. இண்டூ ரைச் சுற்றி 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள பொது மக்கள், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றுவர இரண்டு பேருந்து கள் மாறி செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரையமாகிறது. எனவே, இண்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அறி விக்க வேண்டும். இண்டூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தை தரம் உயர்த்த வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் மகாத் மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். அனைத்து கிராமமக்க ளுக்கும் ஒகேனக்கல் குடி நீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, இண்டூர் பகுதிக்குழு செய லாளராக எம்.ராஜா தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அர்ச்சுணன், ஆர்.சின்ன சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.என். மல்லையன் ஆகியோர் கலந்து கொண் டனர்.