districts

img

எரிபொருள் விலை உயர்வை குறைத்திடு

திருப்பூர், ஏப்.6- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு விலைகளை கடுமையாக உயர்த்தி யுள்ள மோடி அரசுக்கு எதிராக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டனர். திருப்பூர் வடக்கு மாநகர் பகுதியில் ஏழு இடங்களில் பெருந்திரளானோர் பங் கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது. காலேஜ் ரோடு வீட்டு வசதி குடி யிருப்பு பகுதி அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் கலந்து கொண்டு மோடி அரசை கண்டித்து உரை யாற்றினார். இதில் கட்சி நகரக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். அதே போல் அவிநாசி சாலை எஸ்ஏபி தியேட்டர் அருகில் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது. இதில், கட்சியின் நகரச் செயலாளர்  பி.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு வாகனத்திற்கும், சிலிண்டருக்கும் மாலை போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  

கிளை செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் சந் தோஷ், திராவிடர் விடுதலை கழக பொறுப் பாளர் விஜய், மாதர் சங்க செயலாளர் கீதா லட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழ னிச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றி னார்கள். வாலிபர் சங்க பாரதிநகர் ஒருங் கிணைப்பாளர் லோகேஸ்வரன் நன்றி கூறி னார். பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சிவசாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு ஒன்றியம் பெரியாண்டி பாளையம் பகுதியிலும் மார்க்சிஸ்ட் கட்சி யினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்துப் பகுதிகளிலும் காலி சிலிண்ட ருக்கு மாலை அணிவித்து விலை உயர்வை  எதிர்த்து கண்டன முழக்கம் எழுப்பப்பட் டது. இதேபோல், ரங்கநாதபுரம், வேலம் பாளையம், பெரியார் காலனி, அனுப்பர் பாளையம், திலகர் நகர், அனுப்பர் பாளையம் புதூர், தண்ணீர்ப் பந்தல் காலனி, கவிதா லட்சுமி நகர் ஆகிய  மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால்,  நகரக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி அணியினர், பொதுமக்கள் என நூற் றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.