திருப்பூர், மே 4- பின்னலாடை, விசைத்தறி மற் றும் கைத்தறி ஜவுளி உற்பத்திக்கு ஆதாரமான பருத்தி நூலை உடன டியாக அத்தியாவசியப் பொருட் கள் பட்டியலுக்கு கொண்டு வர ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக்குழு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் திருப் பூர் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் புதனன்று பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: மே மாதம் பருத்தி நூல் அனைத்து ரகங்க ளின் விலையும் கிலோவுக்கு ரூ.40 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது திருப்பூர் பின்னலாடைத் தொழில் மட்டுமின்றி, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பெருமளவு நடைபெறக்கூடிய விசைத்தறி மற் றும் கைத்தறி தொழில் உற்பத்தி யில் அசாராணமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. பல ஆயிரக் கணக்கான உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பைச் சந்திப்பதுடன், இந்த தொழிலை சார்ந்து வேலை செய்யக்கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர் வாழ்வும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. எனவே அவசர அவசிய உணர்வு டன் ஒன்றிய அரசு இப்பிரச்சனை யில் கவனம் செலுத்தி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, நூல் விலையைக் கட்டுப்படுத்த பின்னலாடை தொழில் துறையினரின் பல மாத கால தொடர்ச்சியான கோரிக் கைக்கு பின், ஒன்றிய அரசு மிகத் தாமதமாக தலையீடு செய்தது. பருத்தி இறக்குமதி வரி 11 சதவிகி தத்தை வரும் செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைத்து அறிவித்து உள்ளது. எனினும் சர்வதேச சந் தையில் பருத்தி விலை உயர்வு மற் றும் இந்தியாவில் முன்பேர வர்த் தக சூதாடிகள் பெருமளவு பருத் தியை வாங்கிப் பதுக்கி வைத்து செயற்கையான முறையில் விலை களை ஏற்றி வருவது ஆகிய கார ணங்களால், ஒன்றிய அரசு அறி வித்து இறக்குமதி வரி நிறுத்தம் எவ் வித பயனும் இல்லாமல் போய் விட்டது. தற்போதைய சூழ்நிலையில், ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி தொழிலையும், பல லட்சம் உழைக் கும் மக்களின் வேலை வாய்ப்பை யும், சிறு, குறு, நடுத்தர உற்பத்தி யாளர்களையும் பாதுகாப்பதற்கு பருத்தி நூலை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் உடனடி யாகச் சேர்க்க வேண்டும். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க னவே இந்த கோரிக்கையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரு கிறது.
இதன் மூலம் பஞ்சு பதுக்கலை சட்ட விரோதமாக்கி, அவற்றை தொழில் துறையினருக்கு தாரா ளமாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும். செயற்கை விலையேற்றத் தையும் தடுத்து நிறுத்த முடியும். அத்துடன் பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் நூல் விலை உயர்வை கட்டுப் படுத்தி, உள்நாட்டு உற்பத்தியாளர் களுக்கு நூல் கிடைக்கவும், ஜவு ளித் தொழிலை பேரழிவில் இருந்து பாதுகாக்க முடியும். இப்பிரச்சனைக்கு நிரந்தரமாக, நீடித்த தீர்வு காண்பதற்கு, தமிழ் நாடு பருத்திக் கழகம் உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. தமிழகத் தில் பருத்தித் தட்டுப்பாடு இல்லா மல் நூற்பாலைகளுக்கு கிடைக்க இந்த பருத்திக் கழகம் அவசியம். இதற்கான தொழில் மூலதன நிதியை ஒன்றிய அரசு தமிழகத் திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், தமிழக அரசும் இதற்கு முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு பிரதமர் மோடி உடன டியாக தலையீடு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
போராட்டத்துக்கு ஆதரவு
இப்பிரச்சனையில் ஒன்றிய அரசு தலையிட வலியுறுத்தி திருப் பூர் பின்னலாடை தொழில் துறையி னர், தொழிற்சங்கங்கள் கூட்டாக கலந்தாலோசனை செய்து தொழில், வேலை வாய்ப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நடத்தும் போராட்டத் துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு ஆதரவு தெரிவித்துக் கொள் கிறது. இக்கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்று வதற்கு அழுத்தம் தரும் வகையில் நடத்தும் அனைத்து விதமான போராட்டங்களுக்கு வர்த்தகர் கள், வியாபாரிகள் உள்பட அனைத் துப் பகுதி மக்களும் ஆதரவளித்து இப்போராட்டங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள் ளார்.