திருப்பூர், டிச.4- அனுப்பர்பாளையம் - சோளிபா ளையம் சாலையை உடனடியாக சீர மைத்துத் தரக் கோரி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பா ளையம், வேலம்பாளையம், கன்னி யாபூண்டி, பொதிகை நகர், தண் ணீர்ப்பந்தல் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் நிறுவனங்களின் வாக னங்கள் என ஆயிரக்கணக்கானோர் தினம்தோறும் வேலம்பாளையம் - சோளிபாளையம் சாலையைப் பயன் படுத்தி வருகின்றனர். இந்த சாலை சீர மைக்கப்படாமல் குண்டும் குழியு மாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், பாதா ளச் சாக்கடைப் பணிகள், அதானி கேஸ் பைப் பதிக்கும் பணிகள் எனக் குழிகள் தோண்டுவதும் மூடுவது மாக இருந்து வருவதால், அரசு நக ரப் பேருந்துகளும் இப்பகுதிகளுக் குள் வருவதில்லை. மழைக்காலங்க ளில் சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்குவதால் எது சாலை, எது குழி என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகின்றனர். இதுகுறித்து பல முறை நெடுஞ்சாலைத் துறையினருக்கு தக வல் அளித்தும் சாலை அமைப்பதில் காலதாமதம் செய்து வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறையின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் எ.கிளைச் செயலாளர் எம்.வெள்ளியங்கிரி தலைமையில் திங்களன்று சோளிபா ளையம் சாலையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. உடனடியாக சாலையைச் சீரமைக்காவிட்டால் வரும் டிச.15 ஆம் தேதி சாலை மறிய லில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள் ளனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ரங்கராஜ், வேலம்பாளை யம் நகரச் செயலாளர் ச.நந்தகோ பால், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச்செயலாளர் பா.ராஜேஷ், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பாண்டியராஜ், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அனைப்பாளை யம் மாதர் கிளை செயலாளர் செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.