உடுமலை, பிப்.8- சின்னவீரம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை உடுமலை வட்டாட் சியர் அலுவலகத்தின் முன்பு போராட் டம் நடைபெற்றது. உடுமலைப்பேட்டை தாலுகா சின் னவீரம்பட்டியில் வசிக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை வழங் கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை வழங்கக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. இம்மனுக்கள் மீது எவ் வித நடவடிக்கை எடுக்காததை கண் டித்தும், உடனடியாக இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற் றது. இதைத்தொடர்ந்து, உடுமலை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது. மனுவைப் பெற்று கொண்ட வட் டாட்சியர் சுந்தரம், உடுமலை பகுதி யில் வீடு இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த போராட்டத்தில் கோரிக்கை களை விளக்கி கட்சியின் உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி உரை யாற்றினார். கட்சியின் நகரக்குழு உறுப்பினர்கள் சித்ரா, தோழன் ராஜா, கருப்புச்சாமி, கிளைச் செய லாளர்கள் கனகராஜ், சுந்தரம், மகேஸ்வரி, ராஜன், ரத்தினசாமி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.