உடுமலை, டிச.6- பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப் பட்ட இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு களை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். அரசால் பொது மக்களின் பயன்பாட் டிற்கு என்று ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து பல முறை அரசு அதிகாரிகளுக்குத் தெரி வித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கா ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலூக்கா குழு உறுப்பினர் எம்.எம். வீரப்பன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற் றது. மடத்துக்குளம் தாலூக்கா ஜோத்த பட்டி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அரசு சார்பில் 79 க்கும் மேற்பட்ட பட்டி யல் சமூக மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. இதில், பொதுப் பயன் பாட்டிற்கு என்று ஐந்து சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு பல போலியான ஆவணங்களை கொண்டு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், வரும் 13 ஆம் தேதி அரசு நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக எழுத்துப்பூர்வமாக எழுதித் தந்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட் டது. இந்த போராட்டத்தில், கட்சியின் தாலூக்கா செயலாளர் ஆர்.வி.வடி வேல், தாலூக்கா குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராஜரத்தினம், வேட பட்டி ஈஸ்வரன் மற்றும் கணியூர் கிளைச் செயலாளர் ராஜசேகர் உட்பட திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.