உடுமலை, ஏப்.11- உடுமலை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் மனமகிழ் மன்ற கட் டிடத்தில், கடந்த கொரானா காலத்தில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள், அரசு மருத்துவமனை வாகனங்கள் நிறுத்தம் மற்றும் ஊழியர்கள் ஓய்வு அறை செயல்பட்டது போல் தற்பொழு தும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. உடுமலை அரசு மருத்துவமனைக்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான 97 சென்ட் பரப்பளவு இடத்தை, பல வருட காலமாக சில உள்ளூர் வசதி படைத்த நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து மனமகிழ் மன்றம் என்ற பெயரில் கடை களை கட்டி வாடகை வசூல் செய்து வருகின்ற னர். இது நகராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பாக உள்ளது என கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்.11 ஆம் தேதி நகராட்சி ஆணையர் சரவணகுமார் விதி முறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்க ளில் உள்ள மூன்று அறைகளுக்கு சீல் வைத்தார். இதையடுத்து, மனமகிழ் மன்றம் உள்ள அனைத்து பகுதிகளும் உடுமலை நகாரட்சிக்கு சொந்தம் எனவும், விரைவில் இந்த இடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். ஆனால் தற்பொழுது வரை இக்கட்டிடம் மற் றும் இடம் மக்கள் பயன்பாட்டிற்கு வர வில்லை. இந்நிலையில், தற்போது காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. மேலும், உடு மலை அரசு மருத்துவமனை விரிவாக்க பணி கள் நடைபெற்று வருவதால், அரசு மருத்து வமனைக்கு எதிரில் உள்ள மனமகிழ் மன்ற கட் டிடங்களில் காய்ச்சல் சிறப்பு சிகிச்சை மைய மாக மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நகர செயலாளர் தண்டபாணி கூறு கையில், உடுமலை மருத்துவமனை விரிவாக் கப்பணிகள் நடைபெற்று வருவதால் நெருக்க டியான சுழல் உள்ளது. இந்நிலையில், உடு மலை மற்றும் சுற்றுவாட்டார பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவுகிறது என்பதால் இருக்கும் கட்டிடத்தில் தனி வார்டு ஒதுக்கி னால் மீண்டும் நெருக்கடிதான் ஏற்படும். எனவே, நமது நகராட்சிக்கு சொந்தமான இடத் தில், தனியார் அமைப்பு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதை சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும். மேலும், அரசு மருத்துமனை விரிவாக்கம் செய்ய இந்த இடத்தை பயன்படுத்த வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல போராட்டம் நடத்தியதன் விளை வாக, கடந்த 2021 ஆம் ஜூலை மாதம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மனமகிழ் மன்ற கட்டிட இடத்தில் கொரானா பரிசோதனை மையம், மருத்துவமனை ஊழியர்கள் ஓய்வு அறை மற்றும் அரசு வாகனங்கள் நிறுத்தம் என அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்கு வருவாய்த்துறை நிர்வாகம் கொண்டு வந் தது. சிறப்பாக செயல்பட்டு வந்த சிறப்பு பிரி வுகள், எந்த காரணமும் இல்லாமல் மீண்டும் மனமகிழ் மன்றமாக செயல்பட்டு வருகிறது. அரசு இடத்தில் இருக்கும் மனமகிழ் மன்ற இடத்தில் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்ய வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனையின் விரிவாக்க பணி களுக்கு இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.