மணிப்பூர் வன்முறையை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு தாலுகாக் குழு சார்பில் பூந்துறை சாலை, வாய்க்கால் மேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.அய்யா சாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் என்.பால சுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா, தாலுகாக் குழு உறுப்பினர்கள் என்.பழனிசாமி, என்.குப்புசாமி மற்றும் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக பி.நடராஜ் நன்றி கூறினார்.