districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணமான காப்பகத்துக்கு பூட்டு

அவிநாசி, அக்.9- கெட்டுப்போன உணவை வழங்கி மாணவர்களை பலி வாங்கிய விவேகானந்தா சேவாலயத்திற்கு சனியன்று வரு வாய்த் துறையினர் பூட்டினர்.  திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வந்த ஆதரவற்றற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கடந்த புதனன்று கெட்டுப் போன உணவு உட்கொண்ட 14 சிறுவர்கள், காவலாளி ஆகியோ ருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் 3 பேர் உயிரி ழந்தனர். 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்ப வம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இந்நிலையில், இதைத்தொடர்ந்து, காப்பகத்தில் தமிழக அரசின் முதன்மைச் செயலர் க. மணிவாசன், சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித் துறைற அமைச்சர் மு.பெ.  சாமிநாதன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இதில், தனியார் காப் பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனப்போக் கால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்தனர். எனவே, காக் பகத்தை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் காப்ப கத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வரு வாய்த்துறை அதிகாரிகள் காப்பகத்தை பூட்டினர். முழுமை யான விசாரணைக்குப் பிறகே காப்பகத்துக்கு சீல் வைப்பது குறித்து முடிவுசெய்யப்படும், அதுவரை விசாரணை தொடர் பான அதிகாரிகள் மட்டுமே காப்பகத்துக்குள் சென்றுவர முடி யும். வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரி கள் தெரிவித்தனர். காப்பகம் முன் துப்பாக்கி ஏந்திய காவ லர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அஞ்சல் துறை மூலம் பார்சல் சேவை

சேலம், அக்.9- தொடர் பண்டிகை காலத்தை முன்னிட்டு அஞ்சல் அலுவ லகங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை  கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங் கல் உட்பட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா நாட்களில் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் நபர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள், ஆடை, அணிகலன்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை இந் திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கலாம். சேலம் தலைமை தபால் அலுவலகத்தில் பிரத்யேக சர்வதேச பார்சல்  சேவை மையம் பண்டிகை காலம் முடியும் வரை இரவு 9 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், சர்வதேச தபால், பார்சல் சேவையானது ஆத்தூர் தலைமை அஞ்சல் அலுவல கம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம் மாப்பேட்டை, அழகாபுரம் உள்ளிட்ட அனைத்து துணை அஞ் சல் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ் சல் துறை மூலம் சர்வதேச பார்சல்கள் குறைவான கட்டணத் தில் விரைவாக சென்று சேருகிறது. எனவே, பொதுமக்கள் மற் றும் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச தபால், பார்சல் சேவையை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று பயன் படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்என்எஸ் தனியார் கல்லூரி நிகழ்வில் நெரிசல் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 10 பேர் காயம்

கோவை, அக்.9- கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்என்எஸ் தனியார் கல்லூரியில் இசைய மைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிச லில் சிக்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர். இதுகுறித்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சரவணம்பட்டி - துடி யலூர் சாலையில் எஸ்என்எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல் லூரியின் 25 ஆவது ஆண்டை முன்னிட்டு கல்லூரியின் வளாகத்தில் உள்ள மைதானத் தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை காண பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனி டையே பலரை கல்லூரி வளாகத்தில் அனும திக்கவில்லை. இதனால் மாணவர்கள் கல்லூ ரிக்குள் உள்ளே நுழைய முயன்ற போது  தள்ளுமுள்ளு எற்பட்டுள்ளது. இதனைய டுத்து அங்கிருந்த போலீசார் மற்றும் வாயிற் காவலர்கள் தடுத்தபோதும் அங்கிருந்த பிளக்ஸ் பேனர்களை  தள்ளிவிட்டு  உள்ளே கும்பலாக சென்றுள்ளனர். அப்போது, திடீ ரென அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந் தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பில் மாண வர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து வெளியேற முயன்றனர். இதில், பாதுகாப்பு பணியிலிருந்த சரவணம்பட்டி சட்ட ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினா உட் பட 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இதில், உதவி காவல் ஆய் வாளர் பிலோமினா படுகாயமடைந்துள்ளார். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதற்கிடையே மேற்படி நிகழ்ச்சிக்காக கல்லூரி நிர்வாக சார்பில் அனுமதி அளித்த போதும், எத்தனை பேர் கூடுவார்கள் என்கிற முன்தயாரிப்பு நிர்வாகத்திடம் இல்லை என்ப தும், அளவுக்கதிகமாக கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  நிகழ்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடு கள் எதுவும் கல்லூரி சரிவர செய்யப்பட வில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள் ளது.  கோவையில் பெரும்பாலான தனியார் கல் லூரிகள் சினிமா நட்சத்திரங்களை கொண்டு இதுபோன்ற நிகழ்வுகளை மாணவர்கள் மத் தியில் நடத்தும் போது போதிய பாதுகாப்பை யும், இடவசதியையும் ஏற்படுத்திவிட்டு, காவல் துறையிடமும் உரிய அனுமதிக்கு பிறகு தான் நிகழ்வினை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உதகை, அக்.9- தடுப்பு சுவர் கட்ட பள்ளம் தோண் டிய போது மண் சரிவு ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் நிலத்தில் புதைந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.  சென்னையை சேர்ந்த குமரேசன்- பத்மினி தம்பதியினருக்கு உதகை, மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகு தியில் சொந்தமாக இடம் உள்ளது. இவர்கள் அந்த இடத்தில் வீடு கட்ட  முடிவு செய்தனர். இந்தப் பணிகளை அர்ஷத் என்பவர் மேற்கொண்டு வருகிறார். வீடு கட்டும் பணியில் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், வீட்டின் அருகே 35 அடி நீளம் 15 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு  பள்ளம் தோண்டும் பணி கள் சனியன்று நடந்தது.  இந்த வேலை யில் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மாரக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த சேட்டு (54), வேலு (28) உட் பட 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த னர். பள்ளம் தோண்டும் பணிகள் முடி வடையும் தருவாயில், திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.  இதில் சேட்டு, வேலு ஆகிய 2 பேர் மீது மண் விழுந்து மூடியதால் நிலத் தில் புதைந்தனர். மற்ற 2 பேர் தப்பித் துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மற்றும்  அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர். பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய னைப்புக்குழுவினர் சம்பவ இடத் திற்கு வந்து மண்ணில் புதைந்த 2  பேரையும் மீட்டனர். இதில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந் தது. இதையடுத்து  2 பேரின் உடல் களும் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விபத்து நடந்த தகவலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அம் ரித், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்தார். இது குறித்து ஆட்சியர் அம்ரித் கூறுகை யில், தடுப்பு சுவருக்காக பள்ளம் தோண்டும் பணிகள் போதிய பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளாமல் நடைபெற்றுள்ளது. எனவே இதுகுறித்து விசாரிக்க ஆர்டிஓ விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும், என்றார். அப்போது அவருடன் ஆர்டிஓ துரைசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.  இதுகுறித்து உதகை நகர மத் திய போலீசார் கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற் றத்தைப் புரிதல் 304 (2) என்ற சட்டத் தின் கீழ் ஒப்பந்ததாரர் மற்றும் உரி மையாளர் மீது வழக்கு பதிவு செய் துள்ளனர்.

புதுமாப்பிள்ளை தற்கொலை

கோவை, அக்.9- காரமடையை சேர்ந்த வர் பிரபாகரன் (42). இவ ருக்கு கடந்த 6 மாதங்களுக்கு  முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறு கார ணமாக அவரது மனைவி பிரிந்து சென்றார். இதனால் மனவேதனையுடன் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்  

சேலம், அக்.9- சேலம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் எச்சரித்துள்ளார்.  உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில் லரை விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யும் விற் பனையாளர்கள் மற்றும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட் களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கும் தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டு றவு கடன் சங்கங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவது டன் அவர்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 35ன் படி சட்ட  நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது. உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை (MRP) மற்றும் இருப்பு விவரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது, உரம் வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை முனைய கருவி  (POS) ரசீது வழங்குவது, அனைத்து உர பரிவர்த்தனைகளை யும் விற்பனை முனைய கருவி (POS) மூலம் மட்டுமே விற் பனை செய்வது உரிமத்தில் உர கொள்முதல் நிறுவனங்களின் 0 படிவங்களை இணைத்து அனுமதி பெற்ற நிறுவனங்களிட மிருந்து மட்டும் உரங்களை கொள்முதல் செய்வது உரிமத்தில் அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் உரங்களை இருப்பு  வைத்திருப்பது மற்றும் உரங்களை புதுக்கி வைக்காமல் இருப் பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற சேலம் மாவட்டத் தில் உள்ள அனைத்து சில்லரை மற்றும் மொத்த உரவிற்பனை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உரம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தி விவசாயிகள் உடனடியாக தங்கள் வட் டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொட்ட கொள்ள லாம் அல்லது தகவல் மற்றும் தரகட்டுப்பாட்டு வேளாண்மை  உதவி இயக்குனர் அவர்களை 94875 31085 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

மது போதையில் தகராறு விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

மேட்டுபாளையம், அக்.9- காரமடை ரங்கராஜபுர பகுதியில்  குடி போதையில் ஏற்பட்ட தகராறில்  சின்னசாமி (58) என்ற விவசாயி  துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரஞ்சித்(28) என்பவரை கைது செய்து போலீ சார் விசாரணை நடத்தி  வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தை அடுத்த காரமடை பகுதி ரங்கராஜ புரம் என்னும் மலையடிவார கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஆடு வளர்ப்பு மற்றும் சிறிய அளவில்  விவசாய பணியில்  ஈடு பட்டு வருகிறார். இந்நிலையில்,  சனியன்று இவரது ஆட்டுப்பட்டியில் இருந்த இரண்டு ஆடுகள் மேய்ச்சலின் போது வழி மாறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சின்னசாமியும், அதே பகு தியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவரது தோட்டப்பகுதியில் அமர்ந்து ஒன்றாக மது  அருந்தி உள்ளனர். அப்பொழுது தனது  இரு ஆடு காணாமல் போனதற்கு ரஞ்சித் தான் காரணம் என போதையில் சின்னசாமி குற்றஞ் சாட்டியதாக  தெரிகிறது. இதனால்  இருவரி டையே வாய்  தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அருகில்  இருந்த அய்யாசாமி  இருவரையும் சமரசப்  படுத்தி அனுப்பியுள்ளார். ஆனால் குடி போதையில் இருந்த ரஞ்சித் கோபம் அடங்கா மல் தனது வீட்டிலிருந்த  ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு சின்னசாமியை தேடி வந்து அவரது  முதுகில் சுட்டுள்ளார். உரிமம் இல்லாத இந்த கள்ள துப்பாக்கி காட் டுப்பன்றி மான் போன்ற வன உயிரினங்களை கொன்று வேட்டையாட பயன்படுத்தப்படும் வகையினை சேர்ந்தது. இதில் இருந்து வெளியேறும் தோட்டாவில் இருந்து இரு பதிற்கும் மேற்பட்ட பால்ரஸ் இரும்பு குண்டு கள் சின்னசாமியின் உடலை துளைத்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சின் னசாமியை சுட்டு கொன்ற ரஞ்சித் போதை யில் தள்ளாடியபடி தனது வீட்டில் போய் படுத்து உறங்கியுள்ளார். இதுகுறித்து தகவல்  அறிந்த காரமடை போலீசார் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த சின்னச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதை யில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் கள்ள துப்பாக்கியால் சுட்டு கொலை செய் யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி மற்றும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.