districts

img

கன்றுக்குட்டியை தாக்கிக் கொன்ற சிறுத்தை

மேட்டுப்பாளையம், பிப்.29- மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தி னுள் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த கன்றுக்குட்டியை தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத் துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சென்னாமலை கரடு பகுதியில், சிறுத்தையொன்று விவசாயி ஒருவரின் தோட்டத்தினுள் புகுந்து கன்றுக்குட்டியை தாக்கியது. இக்காட்சிகள் அங்கிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.  இதுகுறித்து கன்றுக்குட்டியின் உரிமையா ளர் குருசாமி, சிறுமுகை வனத்துறையின ரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கிருந்த சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்து, அங்கு சிறுத்தை  நடமாடுவதை உறுதி செய்தனர். இது குறித்து  வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சிறுமுகை வனத்துறையினர், வியாழனன்று பிற்பகலில் அச்சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். சிறுத்தை கேமராவில் பதிவான இடத் தில் இருந்து சுமார் இருநூறு மீட்டர் தூரத் தில் சிறுத்தை கடந்து வந்து பாதையை கண்டறிந்த வனத்துறையினர் மலையடி வார பகுதியில் மறைவாக கூண்டை வைத் துள்ளனர். இரவு கூண்டினுள் ஆட்டுக்குட் டியை கட்டி வைத்து, அதனை உண்ண  சிறுத்தை உள்ளே நுழையும் போது, தானி யங்கி கதவு மூலம் சிக்க வைக்க வனத்து றையினர் திட்டமிட்டுள்ளனர். சிறுத்தை நட மாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதும், அதனை பிடிக்க வனத்துறை கூண்டு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.