districts

img

மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரிகள், விசிக கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 30- ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின்  சார்பில் பல்வேறு பகுதிகளில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல்,டீசல், சமையல் எரி வாயு சிலிண்டர்  போன்ற அத்தியாய வசிய உணவு பொருட்கள்  மீதான வரிகளை கைவிடவேண்டும். பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ரேஷன் கடைக ளில் தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும். வருமான வரி வரம்பை  எட்டாத அனைத்து குடும்பங்களுக் கும் மாதம் ரூபாய் 7500 வழங்கிட வேண்டும் எனக்கோரி நாமக்கல் மாவட்டத்தில், நாமகிரிபேட்டை, எலச்சிபாளையம், பெரியமணலி  ஆகிய இடங்களில் இடதுசாரிகள், விசிக கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.சின்னசாமி  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி,  விசிக  மாவட்ட துணைச் செயலாளர் ஆ.நீலவானத்துநிலவன், ஒன்றியச் செயலாளர் கதிர்வேந்தன், பேரூர் செயலாளர் ரா.பன்னீர் (எ) நந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    எலச்சிபாளையம் பேருந்து நிறுத் தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஐ மாவட்ட குழு உறுப் பினர் சிவக்குமார் தலைமை தாங்கி னார். சிபிஎம் மேற்கு ஒன்றிய செய லாளர் எஸ்.வெங்கடாசலம் முன் னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் எலச்சி பாளையம் ஒன்றிய கவுன்சிலர் சு. சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெரியமணலி  பேருந்து நிறுத் தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் எலச்சிப்பாளை யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ. தேவராஜ் தலைமை தாங்கினார். சிபிஐ ஒன்றிய தலைவர் க.அன்பு மணி, சிபிஎம் மேற்கு ஒன்றிய செய லாளர் எஸ்.வெங்கடாசலம் முன் னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில், சிபிஎம்  எலச்சிபாளையம் ஒன்றிய கவுன் சிலர் சு.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் பழனிமுத்து, கணேசன், அன் பழகன், சிபிஐ நிர்வாகிகள் கந் தன்,  விசிக கட்சியை சேர்ந்த வேல் முருகன், முல்லைவாணன், மத் திய சங்க நிர்வாகி பங்கு முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.