இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டு நவ.8 ஆம் தேதியன்று இரவு 8.15 மணிக்கு இந்திய மக்களுக்கு ஓர் அதிர்ச்சியை தெரிவித்தது தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. கருப்பு பணத்தினை ஒழிக்கவே இந்த நடவ டிக்கை என நமது 56 இன்ஞ் மோடி தனது மார்தட்டி கொக்கரித்தார். அவரது கைகூலி களும் (சாதி, மதவாத கட்சிகள்) பணமதிப் பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து பேச துவங்கினர். இந்த நடவடிக்கையின்படி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது எனவும், அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ஆயிரம் நோட்டு கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கிகளில் குவிந்தது சமானிய, ஏழை, எளிய மக்களே தவிர கருப்பு பணம் பதுக்கி வைத்த பெரு முதலாளிகள் அல்ல.
கண்ணீரும்… கம்பளியுமாய்…
திருமணம், காது குத்து போன்ற விழாக் களுக்கு வந்த மொய் பணத்தை மாற்ற சென்றால், “ஏது இவ்வளவு பணம், கள்ள பணமா? கருப்பு பணமா? கொள்ளை யடித்ததா?” என வங்கி அதிகாரிகள் விவ சாரித்த சம்பவம் நம் கண்முன்னே வந்து செல்கிறது. இது மனதளவில் காயம் ஏற்ப டுத்தியது. அதுஒருபுறமிருக்க பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன்பு குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 120 பொது மக்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் உயிரி ழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான புள்ளி விபரம் என்பது யாருக்கும் தெரியாது. இதில், காயமடைந்த வர்கள் பலர் என்பதே நிதர்சனமான உண் மையாகும்.
அதன்படி…
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி யன்று வரை கால அவகாசம் கொடுக்கப் பட்டது. இந்தியா முழுவதும் உள்ள வங்கி களின் முன்பு குவிந்த கூட்டம் தேர்தல் வாக்களிக்க வந்ததைவிட அதிகமாக இருந் தது. அந்த கூட்டங்களை பார்த்து உலக நாடு களே “என்னடா இது?” என்றே அதிர்ச்சி யில் உறைந்தது என்றாலும் மிகையல்ல. மேலும், ஒரு நாளைக்கு வங்கிகளில் 10 ஆயி ரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பழைய நோட்டுகளை மாற்ற முடி யும். அதேபோல் ஏடிஎம்-களில் 2016 ஆம் ஆண்டு நவ.18 ஆம் தேதியன்று வரை ஏடி எம்-களில் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரமும், நவ.19 ஆம் தேதிக்கு மேல் ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம் வரையிலும் எடுக்க முடிந் தது.
விளைவுகள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறி வித்த அடுத்த நாளே (நவ.9 ஆம் தேதி, 2016) பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தங் கத்தின் விற்பனை அதிகரித்தது. இதற்கு காரணம் கணக்கில் வராத பணத்தை தங்க மாக மாற்ற முயற்சித்ததே என்று ஊடகச் செய்திகள் தெரிவித்தன. மேலும், குஜ ராத்திலும், தில்லி - மும்பை நெடுஞ்சாலை யில் உள்ள பெரிய சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட பணத்தாள்களை சுங்கச் சாவடி வசூலிப்பாளர்கள் வாங்க மறுத்த தால் இந்நிலை ஏற்பட்டது. பெரும் பணப் புழக்கம் காணப்படும் திருமணம், கோவில் விழாக்கள் தடைபட்டன. நாட்டின் சில பகுதிகளில் தங்கத்தின் விலை உயர்ந்தது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பணத்தை மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கலை சமாளிப்பதாக இடைத்தரகர்கள் உருவா கினர். அவர்கள் மக்களின் பணத்தை மாற் றித்தருவதற்கு கமிசன் தொகை பெற்றனர். மேலும், ஊழலை ஒழிப்பதற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கி அதிகாரிகளிடையே ஊழலை வளர்த்தது என்றே தான் கூற வேண்டும்.
ஏமாற்றமே மிஞ்சியது
இந்நிலையில், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு அமைப்பினர்கள், தனிநபர்கள் நீதிமன்றத் தில் வழக்கு (58 வழக்குகள்) தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இறுதி தீர்ப்பு திங்களன்று வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கி யது. அதன்படி, இந்த நடவடிக்கை அதா வது ஒன்றிய பாஜக அரசு செய்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என 5 நீதிபதிகளில் 4 பேர் வரவேற்றுள்ளனர். ஒரு வர் சட்ட விரோதம் என்று சொல்லியிருக் கிறார். நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் உயிரிழந் தது உள்ளிட்ட மேற்கண்ட விளைவுகள் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரிய வில்லை. பெண் நீதிபதியான பி.வி.நாக ரத்னா மட்டும் பணமதிப்பு நீக்க நடவ டிக்கை சட்டவிரோதம் என தெரிவித்துள் ளார். ஐவரில் ஒருவராவது எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டாரே என தேற்றிகொள்ள வேண்டியதுதான்.
-விளாடிமிர் பீட்டர்