districts

img

பிப்.23, 24ல் வேலை நிறுத்தம்: ஈரோட்டில் வெற்றிகரமாக்க சூளுரை

ஈரோடு, ஜன.13- தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பிப்.23, 24 ஆம் தேதி களில் நடைபெற்ற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஈரோட்டில் வெற்றிகர மாக்க அனைத்துச் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து தொழிற்சங்கங்களின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு  மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன்,  துணைச் செயலாளர் பொன்.பாரதி, எல்பிஎப் மாவட்ட செயலாளர் சே.கோபால், பொருளாளர் செ.தங்கமுத்து, துணைச் செயலாளர் ஜி.ரவிச்சந்திரன், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் டி.எம்.குமாரசாமி, ஐஎன் டியுசி மாவட்ட துணைத் தலைவர் கே.அழ கேசன், எம்எல்எப் மாவட்ட துணைச் செய லாளர் ஜே.எபினேசர், ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினர் பி.வீரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஒன்றிய மோடி அர சின் மக்கள், தொழிலாளர் விரோத நடவ டிக்கைகளைக் கண்டித்தும், 44 தொழிலா ளர் சட்டங்களை நான்காக குறுக்கி, நிறை வேற்றியுள்ள தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும். மின் சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டம்  உள்ளிட்ட எந்தப் பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. ஒப்பந்த தொழிலாளர் முறையைக் கைவிட வேண்டும். பெட்ரோலியப் பொருட் கள் மீதான கலால் வரியைக் குறைத்து அத்தி யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விரிவான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய பல்வேறு இயக்கங்களை நடத்த இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை வரும் ஜன.21 ஆம் தேதியன்று சூரம்பட்டியில் உள்ள ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் நடத்துவது. மேலும்,  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, துண்டு பிரசுரம் கொடுக்கும் பிரச் சார இயக்கம், பிப்.18 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட இயக்கங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட் டது.