districts

img

தனியார் கூரியர் நிறுவனத்தை வளர்ப்பதற்கே பொதுத்துறையின் அஞ்சல் சேவைக்கும் ஜி‌‌.எஸ்.டி

இந்திய அஞ்சல் துறை உல கிலேயே மிகப் பெரிய கட்டமைப் பைக் கொண்ட சேவைத் துறை யாக இருந்து வருகிறது. இருப்பி னும் மத்திய அரசு தனியார்மய மாக்கல் கொள்கையின் ஒருபகுதி யாக, இன்றும் இந்திய அஞ்சல் சட்டத்திற்கு புறம்பான கூரியர் சர்வீசைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. ஒருகாலத்தில் புது டெல்லியில் போடும் தபால் 48 மணி நேரத்தில் கன்னியாகுமரியை வந்தடைந்தது. ஓடும் ரயிலில் தபால் பிரிக்கும் பணியை வெகுவாகக் குறைந்தது. அஞ்சல் சேவையை சீரழித்து மத்திய அரசு.தனது சொந்த சேவையான தபால் சேவையை தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, பல்வேறு கல்லூரிகளின் விண் ணப்பங்கள், பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை மிட்டாய், கோயில்களின் தீர்த்தம் ஆகிய வற்றை விற்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. போதுமான ஊழியர் இல்லாத காரணத்தால் சில இடங்களில் தபால் தாமத மாக பட்டுவாடா செய்யும் நிலை ஏற்பட்டி ருக்கிறது.  ஆனால், இன்றும் ஒரு தபால் கார்டை அச்சடிப்பதிலிருந்து பட்டு வாடா செய்வது வரை மூன்று ரூபாய்க்கு மேல் ஆனாலும் கூட 50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இருபது கிராம் வரை உள்ள கவரை இந்தியாவில் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல அஞ்சல் துறை ஐந்து ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கிறது. கூரிய ரில் குறைந்த பட்ச கட்டணம் ரூ55. எனினும்,  இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு அஞ்சல் இலாகா என்றால் தெரியவில்லை. கூரி யர்தான் தெரிகிறது. அஞ்சல் கட்டணங்களை கூரியருக்கு இணையாக உயர்த்தி  அஞ்சல் சேவைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கை யின் ஒரு பகுதி தான் அஞ்சல் சேவைக்கும் ஜி‌‌.எஸ்.டி.வரி.

-பி.ராமசாமி, செயலாளர், அஞ்சல் ஓய்வூதியர் சங்கம், ஈரோடு.