districts

img

கொண்டாரெட்டீஸ் மக்களுக்கு பழங்குடி சான்று வழங்கிடுக

சேலம், பிப்.19- கொண்டாரெட்டீஸ் மக்க ளுக்கு பழங்குடியின சான்றிதழை தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மேட்டூரில் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் பெருந்திரள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி,  கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு,  கோவை, திருவள்ளூர் மாவட்டங்க ளில் ஏராளமான கொண்டாரெட் டீஸ் சமூக மக்கள் நீண்ட நெடுங்கா லமாக வாழ்ந்து வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் வரு வாய் கோட்டத்திலும் பண்ணவாடி, பூதப்பாடி, கொளத்தூர், தாள வாடி, பெரியக்கொட்டாய், கண் ணாமூச்சி, சிங்கிரிப்பட்டி, ஆலம ரத்துப்பட்டி, புதுவேலமங்கலம், ரெட்டியூர், புதுரெட்டியூர் உள் ளிட்டு 24க்கும் மேற்பட்ட கிராமங் களில் கொண்டாரெட்டீஸ் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு கடந்த காலங்க ளில் வட்டாட்சியர் மூலம் கல்வி,  வேலைவாய்ப்பு போன்றவைக ளுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இனச் சான்று வழங்கும் அதிகாரம் வரு வாய் கோட்டாட்சியருக்கு வழங்கப் பட்டதில் இருந்து அது மறுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சிலர் சென்னை உயர்நீதி மன்றம் சென்று, கல்வி கற்க மட் டும் வழிகாட்டுதல் பெற்றுள்ளனர். பழங்குடி சான்றுகளும் பெற்று உள்ளனர். அதோடு பெற்றோர்களுக்கு பழங்குடியின சான்று இருந்தால்,  அவர்களது வாரிசுகளுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு பழங்குடி யின சான்று வழங்கப்பட்டிருந் தால், குடும்பத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் பழங்குடியின சான்று வழங்கிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது. ஆனால், இதனை  அமலாக்காமல் மேட்டூர் கோட் டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர்க ளாக வருவோர் இழுத்தடித்தும், மறுத்தும் வருகின்றனர். தற்போது  கொண்டாரெட்டீஸ் சமூக மக்கள்  பழங்குடியின இட ஒதுக்கீட்டில் கொளத்தூர் ஒன்றியம், பண்ண வாடி ஊராட்சி தலைவராக, வார்டு  உறுப்பினராக தேர்வுச் செய்யப்ப டும் நடைமுறை இருந்து வருகிறது.  பிப்.9 ஆம் தேதியன்று சென்னை யில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலன் முதன்மை செயலா ளரை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து, கொண்டாரெட்டீஸ் சமூக  மக்களுக்கு பழங்குடியின சான்று வழங்க உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்நிலையில், கொண்டா ரெட்டீஸ் மக்களுக்கு தாமதமின்றி பழங்குடியின சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேட் டூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தினர் திங்களன்று பெருந்தி ரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியத் தலைவர் நா.வேணு கோபால் தலைமை வகித்தார். ஒன் றியச் செயலாளர் சி.அண்ணா துரை முன்னிலை வகித்தார். இதில்  மலைவாழ் மக்கள்சங்க மாநிலத்  தலைவர் பி.டில்லிபாபு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மேட்டூர் கொளத்தூர் ஒன்றியச் செய லாளர் எஸ்.வசந்தி, விவசாயி கள் சங்க ஒன்றிய துணைச்செயலா ளர் ஜி.வெங்கடாஜலம், மலை வாழ் மக்கள் சங்க ஒன்றியச் செய லாளர் சி.அண்ணாதுரை, ஒன்றியப் பொருளாளர் ரதி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சார் ஆட்சியரிடம் விண்ணப்பம் கொடுத்து பேசிய போது, சார் ஆட்சியரும், இத்துறை யைக் கண்காணிக்கும் அலுவல ரும் தந்த பதிலில், திட்டமிட்டே இம் மக்களுக்கு பழங்குடியின சான்று  வழங்காமல் இருப்பது தெரிய வந்தது. எனவே, மார்ச் மாதம் முதல்  வாரத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திடுவது என்று முடிவு செய்யப் பட்டது.